Followers

Monday, November 20, 2017

சுக்கிரன்


ணக்கம்!
          பல வருடங்களாக சொல்லிக்கொண்டு வரும் ஒரு கருத்து. ஒரு ஜாதகத்தில் குரு கிரகம் நன்றாக இருக்கவேண்டும் அல்லது சுக்கிரகிரகம் நன்றாக இருக்கவேண்டும் என்று சொல்லிருக்கிறேன். ஏன் இதனை சொன்னேன் என்றால் அப்பொழுது தான் உங்களால் வெளியில் பிரபலமாக அல்லது சராசரி வாழ்க்கை கூட வாழமுடியும்.

குரு கிரகத்தின் சாரத்தில் ஒருவர் வாழவேண்டும் என்றால் மிகுந்த ஆச்சாரத்தோடு வாழவேண்டும். அப்பொழுது மட்டுமே குரு கிரகம் அவர்களுக்கு நல்லதை கொடுக்கும். பெரும்பாலான மக்கள் குரு கிரகத்தின் சாரத்தில் வாழ்வதில்லை என்பது தான் எதார்த்த உண்மை.

சுக்கிரனின் காரத்துவத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர் என்பது தான் உண்மையான ஒன்று. மிகுந்த ஆச்சாரியத்தோடு வாழ்பவர்கள் உலகில் மிக மிக குறைவு. சுக்கிரனின் காரத்துவத்தில் வாழ்பவர்கள் தான் உலகத்தில் அதிகம்.

சுக்கிரனின் காரத்துவத்தில் வாழ்ந்துக்கொண்டு அதனை முழுமையாக வாழவேண்டும் என்று தான் நாம் நினைக்கவேண்டும். முழுமையாக வாழவேண்டும் என்று நினைக்கும்பொழுது சுக்கிரனின் காரத்துவத்தை எப்படி எல்லாம் மேம்படுத்தவேண்டும் என்று நினைத்து அதன் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

சாமிகளுக்கு கொடுக்கும் பூக்கள் அனைத்தும் சுக்கிரனின் காரத்துவத்தில் வருகின்றன. பூக்களை வாங்கி நாம் எப்படி கடவுளுக்கு சேர்த்தாலும் அது சுக்கிரனின் காரத்துவத்தை மேம்படுத்துவதாகவே நமக்கு அமையும். இதனை நீங்கள் தொடர்ச்சியாக செய்யவேண்டும் என்பது தான் ஒரு விதி. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: