Followers

Wednesday, November 1, 2017

துன்பம் இல்லாத மனம்


ணக்கம்!
          துன்பம் இல்லாத மனத்திற்க்கு சொந்தகாரர் சுக்கிரன். மற்ற கிரகங்கள் எல்லாம் கொடுக்கும் வாழ்க்கை வசதியாக இருந்தாலும் அதில் மனது ஒண்டாமல் சென்றுக்கொண்டு இருக்கும். 

ஒரு நாட்டின் பிரதமராக இருக்ககூடிய வாய்ப்பை வேறு கிரகங்கள் கொடுக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். பிரதமரின் மனம் நல்ல ஜாலியாக இருக்குமா? நாட்டில் உள்ள தலைவலி முழுவதும் அவருக்கு இருக்கும். அவர் எப்படி ஜாலியாக இருக்கமுடியும். 

கண்டிப்பாக இருக்காது. ஒரு சொகுசுவாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருப்பவனின் மனம் எப்படி இருக்கும் ரொம்ப ஜாலியாக இருப்பான். எந்தவிதத்திலும் கவலை என்பது இருக்கவே இருக்காது.

சொகுசுவாழ்க்கை வாழ்பவன் மனம் தளராமல் ஒரே ஜாலியாக இருப்பான். இராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் எனக்கென்ன என்பது போல இருப்பான். எந்த அரசனும் அவனிடம் கேள்வி கேட்கமுடியாதளவுக்கு இருப்பான்.

சொகுசுவாழ்க்கையை கொடுப்பது சுக்கிரன். இவனே அரசனுக்கு உதவ வைப்பான். எப்படி என்றால் அரசனக்கே கடன் கொடுப்பது இவர்களாக இருக்கும். எந்த நிலையிலும் துன்ப நிலை இல்லாத மனம் வேண்டுமானால் சுக்கிரனின் அருள் கிடைக்கவேண்டும். கோடியில் ஒருவர் இப்படி இருந்தாலே அது பெரிய பாக்கியம் தான் என்று சொல்லலாம். சுக்கிரனின் அருளை பெறுவதற்க்கு என்ன வழி என்பதை பாருங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: