Followers

Monday, November 13, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் மோசமான பலனை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது என்றால் அது வாழ்க்கை முழுவதும் மோசமான பலனை மட்டும் தந்துவிடாது. ஒரு சில காலக்கட்டத்தில் அது நல்ல பலனையும் கொடுக்க ஆரம்பிக்கும்.

இளைமையில் சுக்கிரன் மோசமாக இருந்து பலனை கொடுத்தால் அது ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு நல்ல பலனை கொடுக்கும். மனிதன் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்துவிடகூடாது என்பதால் அது இயற்கையாகவே மாறி நல்ல பலனை கொடுக்கிறது.

நாம் ஒரு ஜாதகத்தை எடுத்து சுக்கிரன் சரியில்லை என்று நாம் சொல்லிவிடமுடியாது. அவர் அவர்களின் பூர்வபுண்ணியத்தை பொறுத்து மாறிவிடும். நல்ல பலனை கொடுக்க ஆரம்பித்துவிடும். ஒரு சிலருக்கு மட்டும் வாழ்க்கை முழுவதும் எதுவும் கொடுக்காமல் பலிவாங்கும்.

சுக்கிரன் மற்றும் குரு போன்ற கிரகங்கள் புத்தியில் தான் கை வைக்கும். இந்த இரண்டு கிரகங்களும் சரியில்லை என்றால் புத்தி ஒழுங்காக வேலை செய்யாமல் எதிலும் முடிவு எடுக்காமல் சென்றுவிடுவார்கள்.

சுக்கிரன் ஒருவருக்கு அதிகப்பட்சம் மோசமான பலனை தந்தால் அவர் திருமணத்திற்க்கு ஒத்துக்கொள்ளமாட்டார். திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு திரிவார்கள். கடைசி வரை திருமணம் செய்யாமல் பிரம்மசாரியாகவே இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: