Followers

Wednesday, November 29, 2017

நான்காவது வீட்டில் சுக்கிரன்


ணக்கம்!
          நான்காவது வீட்டில் சுக்கிரன் இருந்தால் என்ன மாதிரியான பலனை கொடுக்கும் என்று பார்க்கலாம். நான்காவது வீடு சுகஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வீட்டில் சுக்கிரன் அமர்ந்தால் சொல்லிக்கவே வேண்டாம் எல்லாம் நல்லதாகவே வந்து சேர்ந்துவிடும்.

வாகன அமைப்பையும் காட்டக்கூடிய ஒரு இடத்தில் சுக்கிரன் அமர்வது ஒரு யோகம் என்று சொல்லலாம். நல்ல உயர்ந்த விலையுள்ள சொகுசு கார்களை வாங்கி வீட்டில் நிற்க வைக்க சுக்கிரன் வழிவகுக்கும். சொசுகு கார்களை நிறைய வாங்க வைத்திருக்ககூடிய ஒரு அமைப்பு.

இன்று ஒரு நகரத்தில் ஒரு வீடு வைத்திருந்தால் அது பெரிய செல்வந்தர் என்று சொல்லக்கூடிய ஒரு நிலை இருக்கின்றது. பல வீடுகளை வாங்ககூடிய ஒரு நிலையை சுக்கிரன் உருவாக்கிவிடுவார். அதுவும் பெரிய பில்டிங்காக வாங்கி போடக்கூடிய நிலையை உருவாக்கிவிடும்.

சுக்கிரன் நான்கில் அமர்ந்தால் அவர்களின் வீட்டில் எந்த நேரமும் உணவு பற்றாக்குறை இருக்கவே இருக்காது. அன்னபூரணி வீட்டில் குடிக்கொள்ளும் பாக்கியத்தை சுக்கிரன் ஏற்படுத்துவார். இவர்களின் வீட்டில் ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கி குடித்தால் கூட அது அமிர்தமாக இருக்கும்.

வாழ்க்கை முழுவதும் கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழவேண்டிய ஒரு நிலையை உருவாக்குவதில் நாலில் உள்ள சுக்கிரனுக்கு நிகர் எந்த கிரகமும் இல்லை என்று சொல்லலாம். நான்கில் சுக்கிரன் அமர்ந்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: