Followers

Tuesday, November 7, 2017

பிரச்சினை உடனே தீர வழி

ணக்கம்!
          ஒரு வேலைக்கு செல்கிறோம் அப்பொழுது தடைகள் வருகின்றன அல்லது ஏதோ ஒரு பிரச்சினை இருக்கின்றது அப்பொழுது எந்த தெய்வத்தை வணங்கலாம் என்று ஒரு கேள்வியை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.

இந்த மாதிரியான நேரத்தில் தெய்வ உபாசனை பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் அவர்களின் தெய்வத்தை வேண்டலாம். குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு முழுமையாக இருந்தால் குலதெய்வத்திடம் வேண்டலாம்.

மேலே சொன்னதை விட ஒரு ஞானியின் புத்தகம் இருந்தால் அந்த புத்தகத்தை எடுத்து படித்தால் உடனே உங்களுக்கு பிரச்சினை தீரும். புத்தகம் இல்லை என்றால் அவரை உருவத்தை மனதில் நிறுத்தி எனக்கு இதனை தீர்க்கவேண்டும் என்று வேண்டினால் உடனே தீரும்.

ஞானம் அடைந்தவர்களின் ஆசி இருந்தால் அனைத்தையும் நாம் சாதித்துவிடலாம். ஆசி இருப்பதற்க்கு நாமும் ஒழுக்கமானவராக இருக்கவேண்டும். ஒழுக்கமானவராக என்றால் சத்தியத்தை பேசுபவர்களாக இருந்தால் இது எளிதில் உங்களுக்கு கிடைக்கும்.

உங்களுக்கு ஒய்வு இருக்கும் நேரத்தில் ஞானியின் புத்தகங்களை எடுத்து படித்துக்கொண்டு அவர்கள் சொல்லும் வழியை நீங்கள் பயிற்சி செய்துக்கொண்டே இருந்தாலே பல விசயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: