Followers

Monday, November 27, 2017

சுக்கிரன்


ணக்கம்!
          சுக்கிரன் பரிகாரம் செய்து நமக்கு எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்துக்கொள்வது எப்படி என்று பார்க்கலாம். சுக்கிரனின் காரத்துவத்திற்க்கு நாம் சென்றுவிட்டால் நம்மை தேடி வந்து பெண்கள் பேச தொடங்குவார்கள்.

நம்மோடு சண்டைப்போட்டுக்கொண்டு இருந்த பெண்கள் கூட நம்மிடம் வந்து நான் செய்தது தவறு மன்னித்துவிடுங்கள் என்று பேச தொடங்குவார்கள். சுக்கிரன் கிரகம் வேலை செய்ய தொடங்கிவிட்டது என்பது அப்பொழுதே தெரிந்துக்கொள்ளலாம்.

நம்மை தேடி பணம் வரதொடங்கிவிடும். பணம் இல்லாதவர்களிடம் பணம் வரதொடங்கிவிட்டால் சுக்கிரன் சாதகமாக சென்று்க்கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம். பணம் வந்துவிட்டால் கொஞ்சம் ஆடை விசயத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிடுவார்கள். 

இந்த காலத்தில் அனைவரும் நல்ல ஆடைகளை அணிய தொடங்கினாலும் சுக்கிரன் காரத்துவம் உடையவர்கள் விலையுர்ந்த ஆடைகளை அணிய தொடங்குவார்கள் என்று சொல்லலாம். உயர்ந்த கம்பெனி பிராண்ட் ஆடைகளை அணிவார்கள் என்று சொல்லலாம்.

சாப்பாடு விசயத்தில் அதிக கவனத்தை செலுத்துவார்கள். ரோட்டு கடையில் சாப்பிட்டவர்கள் உயர்ந்த உணவுகங்களில் சாப்பிடுவார்கள் என்று சொல்லலாம். சுகத்தை அணிவிக்கும் விசயங்கள் அனைத்தும் நடக்க ஆரம்பிக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: