Followers

Sunday, January 28, 2018

கண்திருஷ்டி ராசி பகுதி 1


வணக்கம்!
          ஒவ்வொரு ராசிக்கும் தகுந்தமாதிரி அவர்களுக்கு கண்திருஷ்டி வருகின்றன. அவர்களின் ராசியின் பண்பை வைத்து அவர்களுக்கு கண்திருஷ்டி ஏற்படும். ராசியின் பண்பை வைத்து பிறர் மனதில் ஏற்படும் எண்ணம் நம்மை தாக்கும். ஒவ்வொரு ராசியினரும் எப்படி கண்திருஷ்டி வரும் என்பதை இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம்.

ஒவ்வொருவரும் தனித்தனியாக அவர்களின் ராசிக்கு தகுந்தமாதிரி பரிகாரம் சொல்லுகிறேன். அதனை தனித்தனியாக செய்துக்கொள்ளுங்கள்.

மேஷ ராசி
           உங்களை பார்த்து பிறர் எப்படி இப்படி உடல்வாகு இருக்கின்றது. எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார். நோய் என்று மருத்துவமனைக்கே செல்லாத நபராக இருக்கின்றாரே, எந்த வேலையை எடுத்தாலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு விரைந்து முடிகின்றார். எதற்கும் பயப்படமால் செயல்படுகிறார் என்று உங்களின் மேல் கண்திருஷ்டி வரும்.

பரிகாரம்
         வாரத்தில் செவ்வாய்கிழமை அன்று ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து உங்களை வலது புறமாக மூன்று சுற்று இடது புறமாக மூன்று சுற்று சுற்றி அந்த பழத்தை நான்காக பாகமாக கட் செய்துக்கொண்டு நான்கு திசையிலும் வீசி விடுங்கள்.

நீங்கள் மட்டும் சென்று தனியாக ஒரு ஒதுக்குபுறத்தில் கூட இதனை செய்துக்கொள்ளலாம். நீங்கள் குடியிருக்கும் பகுதியில் கூட இதனை செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: