Followers

Tuesday, January 30, 2018

கண்திருஷ்டி ராசி பகுதி 2


வணக்கம்!

          ரிஷபராசி  

                    ரிஷபராசியினர் ஜாதகத்தில் லக்கினத்திற்க்கு கெட்ட கிரகங்கள் பார்வை இல்லை என்றால் பெரும்பாலும் அழகாக இருப்பார்கள். உங்களின் அழகை பார்த்தே ஆளை பாரு எப்படி அழகாக இருக்கிறார் என்று பார்த்து கண் வைத்து விடுவார்கள்.

ரிஷபராசியினர் அடிக்கடி ஏதாவது ஒரு பொருளை வாங்கிக்கொண்டு இருப்பார்கள். எனக்கு தெரிந்தவர்கள் கூட அவர்கள் இதனை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.நகை வாங்குவது மொபைல் போன் வாங்குவது வீட்டிற்க்குள்ள பொருட்களை வாங்குவது என்று ஏதாவது ஒன்றை வாங்கிக்கொண்டு இருப்பார்கள். இதனை பொறுக்காமல் உங்களின் மேல் கண் வைத்துவிடுவார்கள்.

திருஷ்டி எப்படி கழிப்பது
                         வேப்பம்மரத்து இலை மிளகாய் கொஞ்சம் உப்பு இதனை உங்களின் வீட்டில் ஒரு சின்ன சட்டியை எடுத்து நெருப்பை வளர்த்து இந்த பொருளை போட்டுவிடுங்கள். புகை நன்றாக வந்தபிறகு உங்களின் தெருவாசலில் சென்று இதனை போட்டுவிடுங்கள். உங்களுக்கு ஏற்படும் திருஷ்டி கழிந்துவிடும்.

மிதுனம்
        உங்களின் திறமையை பார்த்து அடுத்தவர் கண் வைத்திடுவார்கள். ஒரு ஊரில் இருந்து அடுத்த ஊர் மற்றும் அடுத்த நாடு என்று சென்று தொழிலில் கொடிகட்டி பறப்பார்கள். இதனை பார்த்து உங்களை கண் வைத்துவிடுவார்கள்.

ஒரு சிலர் நிறைய பண வசதிகளை பெருக்கிக்கொள்வார்கள். எப்படி தான் இப்படி பணத்தை சம்பாதிக்கிறார் என்று அடுத்தவர்கள் கண் வைத்துவிடுவார்கள். 

திருஷ்டி எப்படி கழிப்பது
                         ஒரு எலுமிச்சைபழத்தை எடுத்து உங்களை சுற்றி போட்டுவிட்டு அதன் பிறகு வாரத்திற்க்கு ஒரு முறை தேங்காய் எடுத்து அதன் குடிமி எல்லாம் எடுத்துவிட்டு உங்களை வலது பக்கம் மூன்று முறை சுற்றி இடது பக்கம் மூன்று முறை சுற்றிவிட்டு அந்த காயை சூறைகாய் உடைப்பது போல தெருவில் போட்டு உடைத்துவிடுங்கள். உங்களின் திருஷ்டி போய்விடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: