Followers

Monday, January 29, 2018

திருஷ்டியும் அமாவாசையும்


வணக்கம்!
         அமாவாசை அன்று கண்திருஷ்டி அதிகமாக போடுவார்கள். ஏன் அமாவாசை அன்று கண்திருஷ்டி போடுகின்றார்கள் என்றால் அன்று கிரகத்தின் பலன் அனைத்தும் குறைந்து தீயசக்திகள் அதிகமாக தலைதூக்ககூடிய ஒரு நாள்.

அமாவாசை அன்று இப்படிப்பட்ட தீயசக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் நாம் கண்திருஷ்டி போடுகிறோம். அமாவாசை அன்று கிரகங்களின் பலன் குறைந்துவிடும். அனைத்து கிரகத்தின் பலனும் இல்லாத ஒரு நாளாகவே அன்றைய நாள் இருக்கின்றது.

அமாவாசை அன்று நாம் தீய சக்திகள் நம்மை தாக்காமல் இருக்க ஒரு சில அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். அந்த அம்மன் பூஜையில் கலந்துக்கொள்வதும் நம்முடைய வாழ்வை நன்றாக மாற்றும்.

நமது சூட்சம உடல் பாதிப்படையாமல் இருக்க திருஷ்டி நமக்கு பல வகையிலும் உதவி புரிகிறது. சூட்சம உடல் பாதிப்படைந்தால் நமது வாழ்வு தரமும் மோசம் அடையும். அமாவாசை அன்று திருஷ்டி கண்டிப்பாக போட சொல்லுவதும் அந்த நேரத்தில் நம்மை பாதுகாத்துக்கொள்ளவதற்க்காக தான் செய்கின்றனர்.

மாதம்தோறும் அமாவாசை அன்றும் திருஷ்டி போடுங்கள் அதோடு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும் போடவேண்டும். உங்களுக்கு எந்த நேரத்தில் பிரச்சினை வருகின்றதோ அந்த நேரத்திலும் திருஷ்டி சுற்றி போடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: