Followers

Wednesday, January 24, 2018

பித்ருதோஷம்


ணக்கம்!
          பித்ருதோஷத்தைப்பற்றி பார்த்தோம். பித்ருதோஷத்தைப்பற்றி ஒரு சில கேள்விகளும் வந்திருக்கின்றன அதற்கு இதனை எழுதிய பிறகு கண்டிப்பாக பதில் தருகிறேன். பித்ருதோஷம் என்றாலே அது அமாவாசையில் விரதம் இருந்து பூஜை செய்வது என்று அர்த்தம் இல்லை. அமாவாசை விரதம் இருக்கவேண்டுமானால் அதற்கு தந்தை தாய் இறந்த பிறகு தான் செய்யமுடியும்.

பித்ருதோஷம் என்பது நம்மோடு இருக்கும் தந்தை தாய் உயிரோடு இருக்கும்பொழுதே நாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக்கொண்டு தான் இருப்போம். தாய் தந்தையை இதில் முடிச்சு போடுவது சரியில்லை என்றே தோன்றுகிறது.

பித்ருதோஷத்தைப்பற்றி ஒரு நண்பர் எனக்கு ஒரு வீடியோ அனுப்பியிருந்தார். தாய் தந்தைக்கு உணவு அளிக்காமல் அவர் இறந்த பிறகு பூஜை செய்வது மடத்தனம் என்று அந்த வீடீயோ சொல்லுகின்றது. 

பித்ருதோஷத்திற்க்கும் அமாவாசைக்கும் சம்பந்தம் ஏற்படுவதில்லை.  நீங்கள் பிறக்கும்பொழுது உங்களின் ஜாதகம் நிர்ணயம் செய்யப்படுகின்றது. தந்தை தாய் உங்களோடு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அமாவாசை விரத்தை இதில் கொண்டு வந்து சேர்க்கவேண்டாம் என்பது தான் நான் சொல்லுகிறேன்.

ஒரு சில கடமை இருக்கின்றது. அந்த கடமையை செய்வது தோஷத்தில் வராது. தாய் அல்லது தந்தை இறந்தால் அவர்களுக்கு அமாவாசை விரதம் இருக்கவேண்டும் என்பது கடமை. தோஷம் என்பது நீங்கள் பிறக்கும்பொழுது வருகின்ற ஒன்று அதற்கும் இதற்கும் சம்பந்தம் ஏற்படுத்தவேண்டாம்.

தொடர்புக்கு :
 9551155800 
 8940773309 

What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: