Followers

Wednesday, January 17, 2018

விளக்கம்


வணக்கம்!
         நேற்று கரிநாள் அமாவாசைபபற்றி ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். அதனை பல நண்பர்கள் செய்தனர். பொதுவாக திடீர் அறிவிப்பு அறிவிப்பதற்க்கு காரணம் அந்த நேரத்தில் அந்த தகவல் நம்மிடம் உதயம் ஆகும்பொழுது அதனை உடனே தருவது உண்டு. முன்கூட்டியே தரமுடியாதற்க்கு சின்ன வருத்தம் இருக்கின்றது. நேற்றைய தினத்தில் நான் சொந்த வேலையில் இருந்த காரணத்தால் இதனை மறந்துவிட்டேன்.

பொதுவாக அமாவாசை தினத்தில் நீங்கள் வெளியில் செல்வதை கொஞ்சம் தவிர்க்க பாருங்கள். பல நண்பர்கள் லீவு கிடைத்துவிட்டது என்று கிளம்பி போய்விட்டார்கள். பலர் நான் குடும்பத்தோடு வெளியில் இருக்கிறேன் நான் என்ன செய்வதும் என்று கேட்டார்கள்.

அமாவாசை பெளர்ணமி நாட்களில் வெளியில் செல்வது தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக தவிர்க்கமுடியாத வேலை இருந்தால் மட்டுமே வெளியில் செல்லவேண்டும் என்பதை முதலில் புரிந்துக்கொள்வது நல்லது.

ஆன்மீகத்தில் நீங்கள் கடைசியாக செய்யவேண்டிய ஒரு வேலையாக  எது இருக்கும் என்றால் அனைத்தும் முன்னோர்களுக்கு செய்யவேண்டியதாக தான் இருக்கும். இராஜகுளியல் என்று சொல்லக்கூடிய புண்ணிய தீர்த்ததில் குளிப்பது எல்லாமே உங்களின் முன்னோர்களுக்காக செய்யவேண்டிய ஒன்று தான் அது என்பது ஆன்மீகத்தில் முத்திய நிலையில் உங்களுக்கு தெரியவரும்.

என்னைப்பொறுத்தவரை முன்னோர்களுக்கு மற்றும் முன்ஜென்மத்திற்க்கு செய்யவேண்டியதை அதிகம் முக்கியத்துவம் கொடுத்து செய்யச்சொல்லுவேன். அது தான் உண்மையான ஆன்மீகம் என்பதும் போக போக உங்களுக்கு தெரியவரும்.

ஜாதககதம்பத்தை படிப்பது எல்லாம் ஏனோ படிக்கிறோம் என்று மட்டும் படிக்கவேண்டாம். என்னுடைய எண்ண ஓட்டத்தில் நீங்கள் இணைந்து இருந்தால் நான் என்ன சொல்லுகிறேன் என்பது உங்களுக்கு நொடிக்கு நாெடிக்கு உணர்வு பூர்வமாகவே தெரிந்துவிடும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: