Followers

Friday, January 12, 2018

பொங்கல் பண்டிகை


வணக்கம்!
          பொங்கல் பண்டிகையைப்பற்றி ஒன்றை சொல்லவேண்டும் என்று பல வருடங்களாக நினைப்பேன். அதனை சொன்னால் பிறர் ஏற்பார்களாக என்பதையும் கொஞ்சம் ஐயம் இருந்தது. இந்த வருடம் இதனை சொல்லியே தீர்வது என்று சொல்லுகிறேன்.

பொங்கல் பண்டிகை என்றாலே அது சூரியனுக்கு சம்பந்தப்பட்ட ஒன்று தான் அனைவருக்கும் தெரியும். சூரியனோடு சக்தி காலையில் நன்றாக இருக்கும். மதியத்திற்க்கு மேல் அதன் சக்தி குறைந்துக்கொண்டே போகும்.

பெரும்பாலும் பொங்கல் பண்டிகையை காலையில் கொண்டாடுவார்கள். பொங்கல் வைப்பது காலையில் வைத்துவிடுவார்கள். காலையில் வைப்பது சூரியனுக்கு உகந்த ஒன்று.

ஒரு சில தொழிலாளிகள் அவர்களின் வீட்டில் பொங்கல் வைப்பது மாலை வேளையில் வைப்பார்கள். மாலை வேளையில் வைப்பது அது சந்திரனை குறிக்ககூடிய ஒன்றாக இருக்கும். சந்திரனுக்கு வைப்பது போல அவர்கள் செயல்படுவார்கள்.

மாலை வேளையில் பொங்கல் வைத்து அவர்கள் சாமி கும்பிடுவார்கள். மாலை வேளை வந்தாலே அது சந்திரனை குறிக்ககூடிய ஒன்றாகவே இருக்கும். சூரியனுக்கு வைப்பதற்க்கு பதிலாக சந்திரனுக்கு பொங்கல் வைத்து படைக்கி்ன்றனர். இது அவர்களின் வழக்கம் அல்ல அவர்கள் சார்ந்திருக்கும் இனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றனர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: