Followers

Monday, January 1, 2018

சுக்கிரன்


வணக்கம்!
          ஒரு மனிதனின் உணவில் 30 சதவீதம் மூளை வேலை செய்ய எடுத்துக்கொள்ளும் என்று படித்து இருக்கிறேன். நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டின் சக்தியில் 30 சதவீதம் மூளைக்கு செல்கின்றது. ஒரு சராசரி மனிதனுக்கு இந்த அளவு என்றால் ஆன்மீகவாதியின் மூளைக்கு அதிகமாகவே எடுத்துக்கொள்ளும்.

பல பதிவுகளில் நான் உங்களிடம் சொல்லிக்கொண்டு வருவது நீங்கள் அதிகமாக ஊட்டசத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லிவருகிறேன். நீங்கள் அனைவரும் ஆன்மீகவாதிகள் என்பதால் இந்த கருத்தை அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகிறேன். அதோடு தற்பொழுது சுக்கிரன் கிரகத்தைப்பற்றி சொல்லிவருவதால் உங்களுக்கு இதனை அதிகமாக சொல்லுகிறேன்.

நாம் குறைந்தது ஒரு வருடத்திற்க்கு மேல் பரிகாரத்தை பரிந்துரை செய்து அதனை செய்துக்கொண்டு வருகிறோம். பரிகாரத்தோடு உங்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவையும் சாப்பிட்டால் எளிதில் உங்களுக்கு நடைபெறும்.

ஊட்டசத்து நிறைந்த உணவை உட்கொண்டால் உங்களை நோக்கி செல்வவளம் வரும் என்பதை அனுபவத்திலும் நான் பார்த்து இருக்கிறேன். இதனை பல முறை நான் சோதனையும் செய்து பார்த்து பலருக்கும் பரிந்துரை செய்துக்கொண்டு வருகிறேன்.

சுக்கிரனின் ஆற்றல் நிறைந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை நீங்கள் சாப்பிட்டால் கண்டிப்பாக சுக்கிரனின் செல்வவளம் உங்களை நோக்கி வந்தே தீரும் என்பது அனுபவ உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: