Followers

Tuesday, January 23, 2018

கர்மா


ணக்கம்!
          நீங்கள் ஒரு ஆன்மீகவாதிகளாக இருந்து உங்களின் வீட்டில் மற்றோருவர் ஆன்மீகவாதிகளாக இல்லாமல் இருந்து ஏழரை சனி உங்களுக்கு நடந்து அல்லது ஏதாவது ஒரு தீமை கிரகங்கள் பலனை உங்களுக்கு தந்தால் உங்களின் வீட்டில் உள்ள ஆன்மீவாதிகளாக இல்லாமல் இருப்பவர்களுக்கு பிரச்சினை வந்து அவர்கள் கஷ்டப்படுவார்கள்.

எடுத்துக்காட்ட உங்களுக்கு ஏழரை சனி நடக்கும் காலத்தில் ஒரு கால் உடையும் கர்மா இருந்தால் உங்களுக்கு நடக்காமல் உங்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு அடிப்பட்டு அவர்கள் கஷ்டபடுவார்கள். உங்களை தாக்காமல் உங்களின் கர்மா அடுத்தவர்களுக்கு செல்லுகின்றது.

இதனை யார் செய்வது என்ற கேட்கலாம். பெரும்பாலும் உங்களின் குரு இதனை தவிர்த்து உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பலாம் அல்லது உங்களிடம் இருக்கும் தெய்வம் உங்களுக்கு கிடைக்கவேண்டியதை தடுத்து உங்களின் குடும்பத்தினர்க்கு கொடுக்கலாம்.

உங்களின் குடும்பமே காப்பாற்ற வேண்டுமானால் அதற்கு உங்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆன்மீகவாதியாக இருக்கவேண்டும் . கண்டிப்பாக இது சாத்தியப்படாத ஒன்றாக தான் இருக்கும். யாராவது ஒரு ஆள் உங்களின் சிந்தனையில் இருந்து மாறி தான் இருப்பார்கள்.

கர்மா எதோ ஒரு வழியில் சரிசெய்வதற்க்கு இப்படிப்பட்ட காரியங்களை நடத்தலாம். நீங்கள் அவர் கூட அல்லல்படும்படி அலைய நேரிடலாம். ஏதோ ஒரு வகையில் தீமை நடந்தால் அந்த கர்மா முடிவடைந்துவிட்டது என்று நினையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: