Followers

Tuesday, January 23, 2018

திருஷ்டி



ணக்கம்!
          ஒருவருக்கு கிரகதோஷம் அதிகபாதிப்பை தருகின்றதோ இல்லையோ அவர்களுக்கு கண்திருஷ்டி அதிகமாக பாதிப்பை தந்துவிடும். கண்திருஷ்டியால் வீழ்ந்தவர்கள் அதிகமாகவே இருப்பார்கள். இதனை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு தான் இதனைப்பற்றி தெரியவரும்.

எப்பேர்ப்பட்ட ஹோமம் செய்தாலும் அதில் உங்களுக்கு கண்திருஷ்டி போக்க ஒரு வழிபாட்டை கண்டிப்பாக செய்வார்கள். சுத்திபோட்டு கண்திருஷ்டியை எடுப்பார்கள். இதனை முதலில் அல்லது கடைசியில் செய்வார்கள்.

கண்திருஷ்டியை எடுப்பதற்க்கு பலவித சடங்குகளை பின்பற்றி வந்தாலும் அதில் ஒன்றை பெரியதாக செய்வீர்கள். கற்பூரத்தை வைத்து சுத்தி போடுவது ஒரு முறை. அமாவாசை காலத்தில் பூசணியை வைத்து சுத்தி போடுவது ஒரு முறை. செவ்வாய் வெள்ளிக்கிழமையில் உப்பு மிளகாய் போட்டு சுத்தி போடுவார்கள். ஒரு சிலர் எலுமிச்சை பழத்தை வைத்து திருஷ்டியை எடுத்து பலி போடுவார்கள்.

எப்படி திருஷ்டி போட்டாலும் அது நாளுக்கு நாள் வந்துக்கொண்டே தான் இருக்கும். அதனை நீங்கள் தொடர்ந்து எடுத்து தான் ஆகவேண்டும். ஒரு புதிய முறையையும் கீழே கொடுத்து இருக்கிறேன். இது பழையமுறை தான் இதனை சொல்லாமல் இருந்தேன். தற்பொழுது சொல்லிருக்கிறேன் செய்து பாருங்கள்.

உங்களின் வீட்டில் காய்ந்த வேப்பிலை இலையை வைத்து கொஞ்சம் நெருப்பில் அந்த இலைப்போட்டு புகையை வீடு முழுவதும் பரப்பி கதவு ஜன்னல் எல்லாம் சாத்தி புகை உள்ளே கொஞ்சம் நேரம் இருக்க வைத்து மறுபடியும் கதவு ஜன்னலை திறந்துவிடுங்கள். கண்டிப்பாக நல்ல பலனை நீங்கள் காணலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Kalairajan said...

அய்யா நல்ல எளிமையான முறை