Followers

Monday, January 22, 2018

நம்பிக்கை


வணக்கம்!
          நமக்கு வருகின்ற எந்த பிரச்சினையும் அது அடுத்தவர்களிடம் இருந்து வந்தது என்று நாம் அதனை நாடதேவையில்லை. பித்ருதோஷமும் அப்படிப்பட்ட ஒன்று தான் நாம் முன்னோர்களை குறைச்சொல்லிக்கொண்டு இருப்போம்.

முன்னோர்களை நாம் குறைச்சொல்ல தேவையில்லை அதற்கு மாற்றுவழி நம்மால் தான் முன்னோர்களுக்கு கூட மோட்சம் கிடைக்கும் என்று எண்ணி செயல்பட்டால் போதும். அவர்களுக்கு நாம் நல்ல வழியை ஏற்படுத்திவிட்டு நமக்கும் ஒரு நல்ல வழியை ஏற்படுத்திவிடலாம்.

பிரச்சினை அடுத்தவர்களால் தான் வருகின்றது என்று நாம் குறைச்சொல்லிக்கொண்டு தவிர்க்காமல் என்னால் இதனை எல்லாம் களைவதற்க்கு சக்தி எனக்கு இருக்கின்றது என்று நீங்கள் உங்களை நம்பினால் போதும் எப்படியும் நீங்களை இதனை சரி செய்துவிடமுடியும்.

பித்ருதோஷம் வந்த அனைவரும் சொல்லுகின்ற வார்த்தை இது தான் நானே அனைத்து கோவிலுக்கும் சென்று இதனை எல்லாம் சரிசெய்தேன் என்று சொல்லிருக்கின்றனர். அவர்கள் போலவே நீங்களும் இதனை சரிசெய்துக்கொள்ளமுடியும்.

சளிப்பு தட்டாமல் காரியத்தில் இறங்கி செயல்புரியவேண்டும். வெற்றி பெறுவது வெகு எளிதில் உங்களுக்கு நடந்துவிடும். இதனை பலருடைய வாழ்க்கையில் நானே பார்த்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Kalairajan said...

அய்யா
பித்ரு தோஷத்திற்கு சீரான திதி, தர்ப்பணம் மட்டும் போதுமா வேறு தோஷநிவர்த்தியுள்ளதா ?