Followers

Saturday, January 27, 2018

திருஷ்டி


வணக்கம்!
         நீங்கள் ஒரு தொழில் செய்யபோகிறேன் என்று உங்களுக்கு அருகாமையில் இருப்பவர்களிடமும் உங்களின் குடும்ப உறுப்பினர்களிடமும் சொன்னால் உடனே அவர்கள் நல்லபடியாக ஆரம்பியுங்கள் என்று சொல்லிவிட்டு அவர்களின் மனதில் ஒரு வித எதிர்மறையான எண்ணமும் உருவாகும். இவன் ஆரம்பித்து எங்கு வெற்றி பெறபோகிறான் என்று அவர்களின் மனம் பொறாமைப்படும்.

ஒரு நல்லதை செய்தால் அதற்கு எதிர்மறையான ஒரு சக்தியை தான் நமது மக்கள் காட்டுவார்கள். நேர்மறையான ஒரு சக்தியை யாரும் காட்டுவதில்லை. உலகமே அப்படி தான் இருக்கும். இது எல்லாம் ஒரு தீய எண்ணம். இப்படிப்பட்டவர்களிடம் தான் நாம் வாழவேண்டியிருக்கிறது. 

இப்படிப்பட்ட தீய எண்ணங்களில் இருந்து விடுபட தான் உங்களிடம் கண்திருஷ்டி போடவேண்டும் என்று சொல்லுகின்றனர் ஆன்மீகவாதிகள். இவர்களின் பதிவுகள் உங்களின் மேல் விழுந்து அந்த தொழிலும் மற்றும் உங்களின் உடல்நலமும் பாதிப்படைந்துவிடகூடாது என்பதற்க்காக கண்திருஷ்டி போடவேண்டும்.

திருஷ்டி எத்தனை நாள்களுக்கு ஒரு நாள் போடவேண்டும் என்ற கேள்வி எழும். வாரத்திற்க்கு செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமை போடலாம் அதே நேரத்தில் எப்பொழுது எல்லாம் உங்களின் உடல் களைப்படைகிறது அல்லது ஏதாவது ஒரு தடை ஏற்படுவது போல் தோன்றுகிறதோ அப்பொழுது எல்லாம் நீங்கள் நாள்களை பார்க்காமல் உடனே திருஷ்டி சுற்றி போட்டுவிடுங்கள்.

எதிர்மறையான பதிவுகளை அவ்வப்பொழுது எடுத்துக்கொண்டே இருந்துவிட்டால் உங்களின் மேல் தேவையற்ற சுமை இல்லாமல் நீங்கள் எளிமையாக அனைத்தையும் செய்துக்கொண்டே இருக்கலாம். 

தொடர்புக்கு :  9551155800, 8940773309  
 What'sApp Number: 9551155800 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: