Followers

Wednesday, January 31, 2018

கண்திருஷ்டி பகுதி 3


வணக்கம்!
          கடகராசி
                   உங்களை பார்த்து எப்படி இப்படி அழகாக ஆடைகளை அணிந்துள்ளார். எப்படி மெடுக்காக இருக்கிறார். எப்படி தன்னுடைய அம்மாவை பார்த்துக்கொள்கிறார். தன்னுடைய குடும்பத்திற்க்காக நன்றாக உழைக்கின்றார் என்று உங்களைப்பார்த்து கண் வைப்பார்கள்.

நல்ல பேச்சாற்றலை பெற்று அனைவரிடம் எப்படி இப்படி பழகுகின்றார். கலையான முகத்தை உடையவராக எப்படி இவர் இருக்கின்றார் என்று உங்களின் மேல கண் வைக்கலாம்.

திருஷ்டி எப்படி கழிப்பது
                                                    
                         நீங்களே இந்த வேலையை அடிக்கடி செய்வீர்கள். ஒரு சூடத்தை எடுத்து மாலை நேரத்தில் உங்களின் வீட்டின் வாசலில் ஏற்றி வைப்பீர்கள். அதோடு உங்களுக்கு பிடித்தமான சாம்பிராணியை நெருப்பில் போட்டு உங்களின் வீடு முழுவதும் காட்டிவிட்டு அதன் பிறகு அதனை தெருவாசலில் போட்டுவிடுங்கள்.

சிம்மராசி
          பெரும்பாலும் அரசு வேலையில் இருப்பார்கள். நாம் எல்லாம் தனியார் கம்பெனியில் கஷ்டப்பட்டு வேலை செய்யும்பொழுது இவர் மட்டும் அரசாங்க வேலையில் நன்றாக சம்பாதித்துக்கொண்டு இருக்கின்றாரோ என்று கண் வைக்கலாம்.

சிம்மராசியினர் காலையிலேயே எழுந்துவிடுவார்கள். காலையில் அதுவும் விடியற்காலையில் எழுந்துவிடுகிறாரோ என்று கூட உங்களின் மேல் கண் வைத்துவிடுவார்கள். 

திருஷ்டி எப்படி கழிப்பது
                         உங்களுக்கு உகந்த ஞாயிற்றுகிழமையிலேயே இதனை செய்யலாம். ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து உங்களின் வாயிற்படியில் கட்டி வையுங்கள். அடுத்த ஞாயிற்றுகிழமை அதனை எடுத்து தெருவில் போட்டுவிடுங்கள். 

உங்களின் மேல் அதிக திருஷ்டி வந்தால் நீங்கள் செவ்வாய்கிழமை அன்று ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து உங்களை சுற்றிவிட்டு அதனை இரண்டாக வெட்டி தெருவில் போட்டுவிடுங்கள். உங்களின் திருஷ்டி கழிந்துவிடும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309 
What'sApp Number: 9551155800   

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Kalairajan said...

அய்யா
எல்லாம் நல்ல எளிமையாக உள்ளது