Followers

Thursday, January 18, 2018

கிரகபலன்


வணக்கம்!
          ஒவ்வொருகிரகத்தையும் பற்றி சொல்லிவிட்டு அதற்கு பரிகாரமும் அறிவித்து செய்து இருக்கிறோம். ஒரு சிலர் ஒரு கிரகத்தின் சார அம்சத்திலேயே அனைத்தையும் செய்துக்கொண்டு விடுவார்கள்.

ஒருவர் ஒரு தொழில் செய்யவேண்டும் என்றால் அந்த தொழில் சம்பந்தப்பட்ட கிரகத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கு பூஜை பரிகாரங்கள் மற்றும் உணவு விசயத்தில் கவனம் செலுத்தி வந்தால் அந்த கிரகத்தின் தன்மை கொஞ்சநாளில் வந்துவிடும். அதன் பிறகு அவர் அந்த தொழிலேயே செய்துக்கொண்டு இருக்கலாம்.

சுக்கிரன் சம்பந்தமாக ஒரு தொழில் செய்கின்றார் என்று வைத்துக்கொள்வோம் சுக்கிரனுக்குரிய அனைத்து பரிகார வேலையும் செய்துவிட்டு அந்த தொழிலை அவர் நடத்திக்கொண்டு இருக்கலாம். அதே நேரத்தில் அவர் சுக்கிரனுக்கு செய்கின்ற பரிகாரத்தை நிறுத்திவிடகூடாது.

ஒரு கிரகம் ஒரு பலனை கொடுத்துக்கொண்டு இருந்தால் அது காலம் முழுவதும் அந்த பலனை கொடுத்துக்கொண்டு இருக்காது. ஒரு சில காலத்தில் பலனை குறைக்க ஆரம்பிக்கும். அதனால் தான் தொடர்ந்த அந்த குறிப்பிட்ட கிரகத்திற்க்கு பரிகாரம் செய்துக்கொண்டே இருக்கவேண்டும்.

தசாநாதன் யார் என்பதையும் பார்த்து அதற்க்கு தகுந்த மாதிரி செய்யவேண்டும். தசாநாதன் சரியில்லை என்றால் எவ்வளவு கொடுத்தாலும் அது கொடுக்காது. தசாநாதனுக்கு செய்யவேண்டிய விசயத்தை கொடுத்துவிட்டு அதன்பிறகு சம்பந்தப்பட்ட கிரகத்திற்க்கு செய்தால் பலன் கிடைக்கும்.

இதனை எல்லாம் செய்தால் தான் வேலை நடக்குமா என்று கேட்கலாம். தானாக கூட நடக்கும் ஆனால் அதற்கு நம்முடைய ஜாதகத்தில் நல்ல நிலையில் கிரகங்கள் அமைந்து இருக்கவேண்டும். நம்முடைய ஜாதகத்தில் கிரகங்கள் சரியாக அமையவில்லை என்றால் இதனை எல்லாம் செய்துக்கொண்டு தான் இருக்கவேண்டும்.

பணத்தை கூட விட்டுவிட்டு பிடித்துவிடலாம் ஆனால் காலத்தை விட்டுவிட்டால் அதனை திரும்ப பெறவே முடியாது. காலத்திலேயே அனைத்தும் கிடைக்கவேண்டும் என்பதற்க்காகவும் இதனை எல்லாம் செய்யுங்கள் என்று அடிக்கடி சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: