Followers

Friday, January 19, 2018

குலதெய்வத்தை குளிர்வித்தல்


வணக்கம்!
          ஒருவருக்கு அதிகப்பட்சமாக பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கின்றது என்றால் அவர் செய்யவேண்டியது அவரின் குலதெய்வ கோவிலுக்கு சென்று அந்த தெய்வத்தை குளிர்விக்க ஏதாவது ஒரு வேலையை செய்யலாம்.

குலதெய்வ கோவில் கட்டாமல் இருந்தால் அந்த கோவிலை கட்டும்பணியில் ஈடுபடலாம். உங்களால் கோவில் கட்டுவதற்க்கு எல்லாம் கையில் பணம் இல்லை என்றால் கோவில் கட்டுவதாக இருக்கும் நபர்களோடு சேர்ந்துக்கொண்டு இந்த பணியில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

சுத்தமாகவே கையில் பணம் இல்லை பிரச்சினை அதிகமாக இருக்கின்றது என்றால் குலதெய்வ கோவிலுக்கு சென்று ஒரு அபிஷேகத்தை செய்யலாம். அபிஷேகம் செய்வதால் அந்த தெய்வம் குளிர்ந்து உங்களுக்கு நல்லது செய்யும்.

ஒரு சிலருக்கு குலதெய்வ கோவிலுக்கு சென்றாலே பிரச்சினை வருகின்றது என்றால் நீங்கள் உங்களின் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு குலதெய்வ கோவிலுக்கு சென்று வரலாம்.

குலதெய்வ கோவில் என்றாலே அதில் பல குடும்பங்கள் இருக்கும். அவர்கள் சண்டைபோட்டுக்கொண்டு குலதெய்வ வழிபாட்டை அதாவது வருடபூஜை செய்யாமல் இருப்பார்கள். அதனை நீங்கள் எடுத்து குடும்பங்களை ஒன்றிணைத்து நீங்கள் அந்த பூஜையை செய்ய வைக்கலாம். இதனை எல்லாம் செய்தால் உங்களின் பிரச்சினை ஓய்ந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: