Followers

Tuesday, January 2, 2018

சுக்கிரன்


வணக்கம்!
          இந்திராகாந்தி  சொன்ன வார்த்தை என்று சொல்லுவார்கள். இந்தியர்கள் தொடக்கத்தில் காட்டும் வேகத்தை போக போக காட்டமாட்டார்கள். முடிவில் அந்தளவுக்கு காட்டமாட்டார்கள் என்று சொன்னதாக படித்து இருக்கிறேன்.

உண்மையான வார்த்தை என்றால் இது தான். நம்மால் தொடக்கத்தில் காட்டும் வேகம் அதனை தொடர்ச்சியாக கொண்டு செல்வதில்லை. நம்மால் கடைசிவரை காட்டமுடியாதற்க்கு காரணம் நம்மிடம் போதிய ஊட்டசத்து இல்லாத உடல் இருக்கின்றது.

உங்களின் உடல் நல்ல ஊட்டசத்தோடு இருந்தால் அது கடைசிவரை கொண்டு செல்லும். உடல் நன்றாக வேலை செய்யும்பொழுது மனதும் நன்றாக வேலை செய்யும். நம்மால் அனைத்தையும் சரியாக செய்துவிடமுடியும்.

ஒரு தொழில் ஆரம்பிப்பது எளிது ஆனால் அந்த தொழிலை சரியாக கொண்டு செல்வதற்க்கு சுக்கிரனின் ஆற்றல் தேவைப்படும். சுக்கிரனின் ஆற்றல் இருந்தால் உங்களின் உடல் சோர்வு அடையாது. நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் வெற்றியை நோக்கி செல்லும்.

சுக்கிரன் சரியில்லை என்றால் உங்களின் உடல் பலவீனப்பட்டு அதோடு மனதும் சோர்வடைந்து உங்களின் தொழில் நசுங்கப்பட்டுவிடும். இதனை சரிசெய்யும் வித்தையை அறிந்துக்கொண்டு செயல்பட்டால் எந்த காரியத்திலும் வெற்றி பெற்றுவிடலாம்.

அம்மன் பூஜை விரைவில் நடைபெறும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: