Followers

Wednesday, January 3, 2018

எது தேவை?


வணக்கம்!
          பொதுவாக எந்த ஒரு பணம் சம்பந்தப்பட்ட பூஜையாக இருந்தாலும் அதில் முதலில் தங்களை இணைத்துக்கொள்வது பணம் நிறைய இருக்கும் நபர்கள் தான். லட்சுமி பூஜை அறிவித்தவுடன் அதற்கு முதலில் போன் செய்து பூஜை செய்ய சொன்னவர்கள் யார் என்று பார்த்தால் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நபர்கள் தான் செய்ய சொன்னார்கள். 

எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் நான் நினைப்பது பணத்தட்டுபாட்டோடு இருக்கும் நபர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக தான் பணத்தை குறைத்து செய்துக்கொண்டு இருக்கிறேன்.

பணம் இல்லை என்று சொன்னவர்கள் எல்லாம் வேறு வேலையில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு எது தேவை எது தேவையில்லாத விசயம் என்பதை முதலில் நீங்கள் புரிந்துக்கொண்டால் தான் உங்களால் முன்னேற்றம் அடையமுடியும்.

பணம் இல்லாதவர்கள் செய்யும் வேலை எல்லாம் தேவையில்லாத வேலையாக தான் செய்துக்கொண்டு இருப்பார்கள். இதனை தவிரக்க அவர்களின் கர்மா விடுவதில்லை என்று நினைக்கிறேன். முதலில் அமைதியாக அமர்ந்து எது நமக்கு தேவை என்பதை யோசித்து அதனை எழுதிவைத்துக்கொண்டு அதனை மட்டும் செய்யுங்கள்.

பணம் போனால் கூட சம்பாதித்துவிடமுடியும். காலம் போனதை யார் வந்தாலும் திருப்பிக்கொடுக்கமுடியும் என்பதை புரிந்துக்கொண்டால் அனைத்தையும் விரைவில் முடித்துக்கொள்ள நீங்கள் நினைப்பீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: