Followers

Tuesday, May 1, 2018

இனிய தொடக்கம்


வணக்கம்!
         ராகுவைப்பற்றி நேற்றைய எழுதிய பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசினார்கள். என்னுடைய குழந்தைக்கும் இப்படி இருக்கின்றது என்றார்கள். ஒரு சிலர் இராகுவால் நிறைய பாதிப்பை நாங்கள் பெற்று இருக்கிறோம் என்றும் சொன்னார்கள்.

கலியுகத்தில் இராகுவின் தாக்கம் அதிகமாக தான் இருக்கின்றன. என்ன செய்வது ஒவ்வொருவரின் கையிலும் ஒரு செல்போன் எனும்பொழுது இராகுவின் தாக்கம் இருக்கதான் செய்யும். இதனை தவிர்க்கமுடியாத படி இருக்கின்றது.

ஒவ்வொருவருக்கும் பூர்வபுண்ணியம் என்ற இடம் பாதிக்கப்படைந்து இருக்கும்பொழுது இந்த பிரச்சினை அதிகமாகவே தலைதூக்குகிறது. ஒருவர்க்கு மனநிலை பாதிப்பு வருகின்றது என்றால் அவரின் பூர்வபுண்ணியம் சம்பந்தப்படாமல் இருக்கவே இருக்காது. 

இராகு என்றாலே நன்றாக சோதிடம் தெரிந்தவர்களுக்கு தெரியும் ஆத்மா சம்பந்தப்பட்ட விசயம் என்பதால் இதனை அதிகம் பேர் தொடுவதில்லை. முடிந்தளவுக்கு கோவில்களுக்கு சென்று வழிபட்டு விடுங்கள் என்று சொல்லுவார்கள்.

பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியஸ்தானம் அடிப்படுவதற்க்கு இராகு தான் அதிகமாக பொறுப்பு வகிப்பார். இந்த இரண்டு வீடு தான் உங்களின் வாழ்க்கையை அதிகமாக தீர்மானிக்கும் வீடாக இருக்கின்றது. இராகுவைப்பற்றி நன்றாக ஆராய்ந்து அதற்கு தகுந்தார் போல் பரிகாரத்தை செய்யுங்கள். கண்டிப்பாக இதில் இருந்து விடுபடலாம்.

அனைவரையும் ஜாதக கதம்ப கட்டண சேவையில் இணைந்துக்கொள்ள அன்போடு அழைக்கின்றேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: