Followers

Friday, May 18, 2018

கேள்வி & பதில்


வணக்கம்!
          ஒரு நண்பர் கெடுதல் தசாவைப்பற்றி சொல்லி பயமுறுத்திகிறீர்கள் என்று கேட்டார். கெடுதல் தசாவைப்பற்றி சொல்லி பயமுறுத்தி அதனால் மக்கள் வருவார்கள் என்று இதனை சொல்லவில்லை. ஒரு எச்சரிக்கை கொடுத்துவிட்டால் வருகின்றவர்கள் அதற்கு தகுந்த மாதிரி நடந்துக்கொள்வார்கள் என்பதற்க்காக சொல்லுகிறேன்.

நீண்டகால தசா கெடுதல் தசாவாக வரும்பொழுது அது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் அவர்களுக்கு பிரச்சினை கொடுத்து அதில் மாட்டிக்கொள்வார்கள் என்பதால் தான் கெடுதல் தசாவிற்க்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறேன்.

ஒருவருக்கு நடைபெறும் தசா அவர்களுக்கு மாற்றத்தையும் அல்லது அதே நிலையிலும் பலனை கொடுத்துக்கொண்டு இருக்கும். இராகு தசா பதினெட்டு வருடங்கள் நடைபெறும். ஒருவருக்கு பதினெட்டு வருடங்கள் கெடுதலை கொடுத்தால் அவர் என்ன செய்யமுடியும். அவரால் ஒன்றுமே செய்யமுடியாமல் இருந்தால் அவர்களுக்கு அந்த தசாகாலம் முழுவதும் வீணாக போய்விடும்.

ஒருவருக்கு நடைபெறும் தசா காலம் முழுவதும் வீணாக போய்விடகூடாது என்பதற்க்காக மறுபடியும் மறுபடியும் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். உங்களின் ஜாதகத்தை எடுத்து எந்த தசா நடைபெறுகிறது என்பதை பாருங்கள். அது நல்ல பலனை கொடுத்தால் அனுபவியுங்கள். கெடுதல் பலனை கொடுத்தால் எதனால் பிரச்சினை கொடுக்கிறது என்பதை பாருங்கள்.

கெடுதல் தசாவிற்க்கு உள்ள பரிகாரத்தை நீங்கள் வழிபாட்டு முறையில் கூட செய்துக்கொள்ளலாம். ஜாதகத்தை பார்த்துவிட்டு அதற்கு தகுந்தார் போல் வழிபாட்டை செய்யுங்கள் அல்லது பரிகாரத்தை செய்துவிட்டு கெடுபலனை குறைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: