Followers

Wednesday, May 2, 2018

ஸ்டீவ் ஜாப்ஸ்


வணக்கம்!
          நண்பர் மெய்யழகன் கேட்ட கேள்வி ஒன்றை பார்க்கலாம். ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியாவிற்க்கு வந்து கிடைத்தது வைத்து பெரிய ஆளாக வந்தார். நமக்கு எல்லாம் இப்படி கிடைக்காதா என்று கேட்டார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்து ஆன்மீகத்தை நாடி இருந்தாலும் அவர் கிடைத்ததை வைத்துக்கொண்டு அவரின் உழைப்பை முழுமையாக போட்டு மேலே வந்தார். நம்முடைய ஆட்களுக்கும் கிடைக்கும். அதனை வைத்து நம்ம ஆட்கள் செயல்படுத்துவதில் தோல்வி அடைந்துவிடுவார்கள்.

ஸ்டிவ் ஜாப்ஸ்க்கு கிடைத்ததோ இல்லையோ அவருக்கு கிடைத்தது போலவே எண்ணிக்கொண்டு செயல்பட்டார். நம்ம ஆட்களுக்கு கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு திரிவார்கள்.

நான் நிறைய பேர்க்கு எனது சக்தியை வைத்து செய்துக்கொடுத்தாலும் எல்லாம் முடிந்த பிறகு என்ன சொல்லுவார்கள் என்றால் ஒன்றும் நடக்கவே இல்லை என்று சொல்லிக்கொண்டு சென்றுவிடுவார்கள். நம்ம ஆட்களின் எண்ணம் என்பது இப்படி தான் இருக்கும்.

நான் வெளிநாட்டுக்காரர்களுக்கும் அதாவது இந்தியர்கள் இல்லாத வெளிநாட்டு ஆங்கிலேயர்களுக்கும் செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். அவர்கள் இதுவரை யாரும் குறை என்பது சொன்னதே கிடையாது. எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் செய்கிறேன். அவன் கையாளும் திறமைக்கும் நமது ஆட்கள் திறமையும் பார்த்தால் நம்ம ஆட்களிடம் ஒன்றுமே தெரியாதவர்களாக இருக்கின்றனர்.

வெளிநாட்டுக்காரன் நடக்கிறதா என்பதை பார்க்கமாட்டான். எனக்கு நடக்கும் நீங்கள் செய்யுங்கள் என்று செயலில் இறங்கிவிடுவான். அவன் போடும் உழைப்பு என்பது 99 சதவீதம். 1 சதவீதம் ஆன்மீக சக்தி இருக்கும். நம்ம ஆட்கள் வீட்டிற்க்குள்ள உட்கார்ந்துக்கொண்டு இந்த சாமியாரிடம் செய்ய சொன்னால் ஒன்றும் செய்யாமல் இருக்கிறான். ஒன்றும் நடக்கவில்லை என்பார்கள். 

ஒரு சக்தி கிடைத்தால் அதனை எடுத்துக்கொண்டு செல்லும் விதத்தில் தான் வெற்றி இருக்கின்றது. உங்களின் சிந்தனை எல்லாம் மாற்றினால் கண்டிப்பாக நீங்கள் ஒரு ஸ்டீவ் ஜாப்ஸ்விட அதிகமாகவே பெயர் வாங்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: