Followers

Tuesday, May 22, 2018

கர்மவினை


வணக்கம்!

நட்சத்திரப்படி உள்ள குணங்களை மாற்ற நினைத்தாலும் கர்மவினைப்படி பலனை சாதாரண மனிதன் அனுபவித்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்.

திரு கலைராஜன் அவர்கள்

தங்களின் கருத்துக்கு நன்றி ஐயா. எனக்கும் இப்படிப்பட்ட பிரச்சினை எல்லாம் இருந்தது. நிறைய ஞானிகளின் புத்தகங்களை தேடி தேடி படித்து பார்த்து இதனை எல்லாம் மாற்றினேன். கர்மா என்பது கொஞ்சமாவது நம்மை துரத்திக்கொண்டு தான் இருக்கின்றது.

ஞானிகளின் புத்தகங்களை எப்பொழுதும் கையில் வைத்திருக்கலாம். தற்பொழுது செல்போன் இருப்பதால் வாட்ஸ்அப்பில் நிறைய ஞானிகளின் கருத்துக்களை தொகுத்து வழங்கிக்கொண்டு இருக்கின்றனர். அதன் வழியாக படிக்கலாம்.

நாம் ஒரு சாதாரணப்பட்ட மனிதன் நமக்கு வழிகாட்ட இப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக இருந்தால் தான் நம்மால் நிறைய விசயங்களை மாற்றமுடியும். எப்பொழுதும் ஒரு ஞானியின் பார்வையில் நாம் இருக்கவேண்டும் அப்படி இல்லை என்றால் அவர்களின் கருத்து எண்ணம் நம்மோடு இருந்தால் தான் ஒரு சாதாரண மனிதனுக்கு நல்லது.

கர்மவினை என்பது முதலில் நம்முடைய சிந்தனையை தான் கெடுக்கும். நல்ல சிந்தனையை உருவாக்க ஞானிகளின் கருத்துக்கள் அதிகமாக பயன்படும் என்பது தான் அனுபவ உண்மை. நல்ல அறிவு என்பது உருவானாலே ஒருவனை மாற்றத்தை நோக்கி செல்வான்.

எப்பொழுது ஒரு ஆன்மீகவாதியோடு தொடர்பு இருந்தால் கண்டிப்பாக ஒருவருக்கு வரும் பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். அவர்களின் ஆன்மீகபார்வை என்பது கர்மாவை போக்கும் என்பது என்னுடைய அனுபவத்தில் நான் கண்டது. இதனை அனைவரும் பின்பற்றி வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Kalairajan said...

அய்யா
நல்ல கருத்துள்ள பதிவு

karthick kumaren said...

தேளிவான கருதது அய்யா