Followers

Wednesday, May 30, 2018

கெடுதல் நேரம் எப்பொழுது வரும்?


வணக்கம்!
          ஒரு மோசமான கிரகத்தின் தசா அல்லது கோச்சாரபலன் வருவதற்க்கு முன்பே தன்னை தயார் செய்துவிடும் அதனை செயல்படுத்துவது அதன் காலத்தில் இருக்கும். தற்பொழுது உங்களுக்கு நல்ல நேரம் நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் இந்த நேரத்தில் உஷாராக செயல்படவேண்டும்.

நல்ல நேரத்தில் நமக்கு வரும் செல்வம் அதனை வைத்து ஏதோ செய்கிறோம் என்று செய்வோம் அதன் பாதிப்பு கெடுதல் நேரத்தில் தான் தெரியும். என்னை நாடி வரும் பெரும்பாலான நபர்கள் சொல்லுவது நல்ல பணம் வந்தது. நமக்கு பணம் வந்துக்கொண்டே இருக்கும் என்று பெரிய அளவில் ஆசைப்பட்டேன். பணம் நின்றுவிட்டது தற்பொழுது மாட்டிக்கொண்டேன் என்பார்கள்.

எதுவுமே தொடர்ச்சியாக நமக்கு வந்துக்கொண்டே இருக்கும் என்று நாம் நினைக்ககூடாது. அதே நேரத்தில் நம்முடைய நல்ல காலத்தில் மிக மிக நிதானமாக இருக்கவேண்டும். நிதானமாக இருந்துவிட்டால் கெடுதல் கிரகங்கள் நம்மிடம் அதிகம் வேலையை காட்டாது.

நாம் இஷ்டத்திற்க்கு ஆட்டம் போடும்பொழுது நமக்கு பிரச்சினையை அந்த நேரத்திலேயே நமக்கு தெரியாமல் செய்துவிடுகின்றது. அது பிரச்சினையை கொடுக்கும் நேரம் வந்துவிட்டால் பெரிள அளவில் காட்டிவிடுகின்றது. 

உங்களுக்கு தற்பொழுது நல்ல நேரம் நடந்துக்கொண்டு இருக்கின்றது என்றால் நீங்கள் கொஞ்சம் உஷாராகவே இருங்கள். அனைத்தையும் நன்றாக கவனித்துக்கொள்ளவும். நாம் சரியாக இருந்துவிட்டால் போதும் அதன்பிறகு இறைவன் விட்ட வழி என்று இருந்துவிடலாம்.

மதுரைக்கு இன்று செல்கிறேன். மதுரையில் இருந்து திரும்பியபிறகு பதிவுகளை தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: