Followers

Tuesday, May 29, 2018

எதனால்?



வணக்கம்!
          பல இடங்களில் நாம் சொல்லுவது உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டுமானால் நீங்கள் நிறைய புண்ணியம் செய்துவிடுங்கள் என்று அடிக்கடி சொல்லுவது உண்டு. இது நமது தலைமுறையை காப்பதற்க்கு மட்டும் அல்லாமல் நீங்கள் அடுத்த பிறப்பு எடுப்பதற்க்கும் நன்றாக இருக்கும் என்பதற்காகவும் இதனைப்பற்றி நிறைய சொல்லிருக்கிறோம்.

நான் எந்த விசயத்தை சாென்னாலும் உண்மை நிலைமை எப்படி இருக்கின்றது என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல் சொல்லிவிடுவது உண்டு. நாம் நிறைய புண்ணியம் எல்லாம் செய்தாலும் இது எப்படி நம்மை காப்பாற்றும் என்பது இறைவனுக்கு மட்டும் தெரிந்த ஒன்று.

பல இடங்களில் நீங்களே பார்த்து இருக்கலாம். ஊரில் பள்ளிகூடம் கட்டுவதற்க்கு மற்றும் மருத்துவமனை கட்டுவதற்க்கு எல்லாம் அந்த காலத்தில் தன்னுடைய நிலத்தை கொடுத்து இருக்கின்றனர். பல ஊர்களில் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்திருப்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும்.

இப்படிப்பட்ட நிலம் கொடுத்திருக்கின்றார்கள் என்றால் அவர்களின் தர்மத்தை எப்படி சொல்லுவது அவர்களின் இந்த செயல் நாம் எதனோடும் ஒப்பிட முடியாது. இது எப்படிப்பட்ட புண்ணியத்தை அவர்களுக்கு கொடுத்திருக்கும்.

இப்படி நிலம் மற்றும் கட்டடம் எல்லாம் கட்டிக்கொடுத்து மக்களுக்கு உதவி செய்த பெரும்பான்மையான குடும்பங்கள் இன்று அட்ரஸ் இல்லாமல் சென்றுவிட்டது என்பது தான் நான் பார்த்த வரையில் உண்மையான தகவல். பல ஊர்களில் இப்படிப்பட்ட குடும்பங்கள் வாரிசுகள் என்று ஒருவரும் கூட இல்லாமல் இருக்கின்றனர். அந்த குடும்பங்கள் எல்லாம் என்ன ஆனாது என்று கூட தெரியவில்லை.

இன்று பல ஊர்களில் அவர்களின் வாரிசுகள் ஒரு சிலர் இருந்தாலும் மிகுந்த கஷ்டத்தில் இருக்கின்றனர். அந்த ஊர்களில் எல்லாம் அந்த ஊரை கெடுத்து கொண்டு இருப்பவர்கள் அந்த ஊர்களில் பெரியஆள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். கெட்டவன் இன்று தலைவனாக இருக்கின்றனர் என்று சொல்லலாம்.

இவர்கள் செய்த இந்த புண்ணியம் எல்லாம் எங்கு சென்றது என்று சந்தேகப்பட வைக்கின்றது. கண்டிப்பாக இப்படிப்பட்ட நிகழ்வுகள் உங்களின் ஊரிலும் நிகழ்ந்து இருக்கும். இதனை கொஞ்சம் நினைவுகளை அசைப்போட்டு பாருங்கள். என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கு புரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: