Followers

Thursday, May 17, 2018

காேடை விடுமுறை


வணக்கம்!
          கோடை விடுமுறை காரணமாக அனைத்து கோவில்களிலும் கடுமையான கூட்டம் இருக்கின்றது. நமது நண்பர்கள் பலர் கோவில்களுக்கு சென்று கூட்டமாக இருக்கின்றது சாமி தரிசனம் செய்யமுடியவில்லை. பல மணிநேரம் காத்திருக்கவேண்டியுள்ளது என்று சொல்லியுள்ளனர்.

பெரும்பாலும் இந்த நேரத்தை கொஞ்சம் தவிர்த்துவிடுவது நல்லது என்றே தோன்றுகிறது. பள்ளிகள் திறந்த பிறகு கோவில்களில் கூட்டம் குறையும். பள்ளிகள் திறந்த பிறகு கோவில்களுக்கு சென்றால் நல்ல தரிசனம் செய்துவிட்டு வரலாம்.

இந்த நேரத்தில் சென்றால் கட்டண தரிசனத்தில் கூட பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. சாமியையும் தரிசனம் நின்று பொறுமையாக தரிசனம் செய்யமுடியவில்லை என்று நண்பர்கள் சொல்லிருக்கின்றனர். அடுத்த மாதத்தில் இருந்து கோவிலுக்கு செல்லுங்கள்.

உங்களின் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களை அழைத்துசெல்லும்பொழுது கூட்டம் குறைவாக உள்ள கோவில்களை தரிசனம் செய்ய அழைத்துச்செல்லுங்கள். வீட்டிலேயே நிறைய பூஜைகளை செய்து அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: