Followers

Thursday, May 24, 2018

விழிப்புணர்வு


வணக்கம்!
          இரண்டு நாள்களாக கலவரம் பற்றி தான் அதிகமான எண்ணங்கள் எல்லா இடத்திலும் வந்துக்கொண்டு இருக்கின்றன. ஜாதக கதம்பத்தில் ஏற்கனவே சொல்லியபடி ஒவ்வொன்றாக வந்துக்கொண்டே இருக்கும் இதனைப்பற்றி கவலைப்படாமல் உங்களின் வேலையை பாருங்கள் என்று சொல்லிருக்கிறேன்.

இந்த பதிவு உங்களை விழிப்புணர்வுக்கு கொண்டு செல்வதற்க்காக எழுதுகிறேன் வேற எந்த நோக்கத்திற்க்காகவும் இல்லை என்பதை சொல்லிவிடுகிறேன். ஒரு சில காலங்களாக ஒரு வார்த்தையை உங்களின் முன்னாடியே வந்துக்கொண்டு வருகின்றனர். அது போராட்டம் என்ற வார்த்தையை அது இன்றைக்கு பல மடங்கு பெரியதாக்கி பல பேரை கொல்லும் நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

ஒரு வார்த்தையை பல தடவை சொல்லி சொல்லி அதனை செயல்படுத்தும் ஹிட்லர் டெக்னிக்கை கையாண்டு வருகின்றனர். அதற்கு விழிப்பு இல்லாமல் அதில் மாட்டிக்கொண்டு அவதிப்படுகின்றனர். ஆன்மீகத்தில் ஒன்றை சொல்லுவார்கள். உலகத்தில் மாயையில் சிக்கிக்கொள்கின்றனர் என்பார்கள் அல்லவா. 

பலர் மாயையில் சிக்கி மாட்டிக்கொள்கின்றனர். இதில் நீங்களும் சிக்கிக்கொள்ளாதீர்கள். உங்கள் மீது மாற்றி மாற்றி எதையாவது வீசிக்கொண்டு இருக்கும் இந்த உலகம். இதில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

ஆன்மீகத்தில் மாயை என்பார்கள். சோதிடத்தில் தீயகிரகங்கள் செய்யும் கர்மா என்பார்கள். இதில் விழிப்பு இருந்தால் பெரியதாக உங்களுக்கு பிரச்சினை வரபோவதில்லை. விழிப்பு இல்லை என்றால் உங்களுக்கு தான் பிரச்சினை.

தமிழ்நாடு என்றாலே நல்ல ஊர் என்ற பெயர் இருக்கின்றது. அமைதியான நாடு. நிறைய கோவில்கள் இருக்கின்றன. புகழ்பெற்ற கோவில்கள் இருக்கின்றன. இதனை எல்லாம் நாம் காப்பாற்றமுடியாவிட்டாலும் அமைதியாக இருந்தாலே போதும். காலம் நமக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கும். விழிப்புணர்வோடு இருங்கள். தமிழ்நாட்டு முழுவதும் சென்று இருக்கிறேன் அனைவரும் நல்லவர்கள். யாருக்கும் பாதிப்பை மறுபடியும் கொடுக்க கூடாது என்று வேண்டுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: