Followers

Sunday, May 13, 2018

சண்டை சச்சரவுக்கு பரிகாரம்


ணக்கம்!
         பெரும்பாலான தம்பதிகள் தங்களுக்குள் சண்டை சச்சரவு போட்டுக்கொண்டால் அவர்கள் அருகில் இருக்கும் பிரசித்துபெற்ற முருகன் கோவிலுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

ஜாதகத்தில் செவ்வாய்கிரகம் சரியில்லாமல் அமைந்தால் மற்றும் கோச்சாரபடி செவ்வாய்கிரகம் செல்லும் வீடு உங்களுக்கு சரியில்லை என்றாலும் உங்களின் இல்லறதுணையிடம் இருந்து சண்டை சச்சரவு ஏற்பட்டுவிடும்.

இது வாய் சண்டையோடு மட்டும் இருந்துவிட்டால் ஒரளவு சமாதானம் ஆகிவிடலாம் அதனையும் மீறி அதிகமாக சண்டை ஏற்படும்பொழுது பிரிவு ஏற்படும். திருமணமான அனைவரும் சந்திக்கும் பிரச்சினை தான் இந்த சண்டை சச்சரவுகள். இது முற்றிவிடகூடாது.

இதற்கு நீங்கள் உங்களின் அருகாமையில் அமைந்த பிரசித்துபெற்ற முருகன் கோவிலாக இருந்து அந்த கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வரவேண்டும் அப்படி முடியாதவர்கள் மாதம் ஒரு முறையாவது சென்று வழிபட்டு வரவேண்டும் தம்பதிகள் இருவரும் சென்று வழிபட்டு வந்தால் நன்றாக இருக்கும்.

உங்களின் வீட்டில் கணவன் மனைவி மட்டும் இல்லை குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்கள் சண்டை போட்டால் கூட அது செவ்வாய்கிரகத்தால் தான் வரும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு அருகில் உள்ள முருகன் கோவிலாக இருந்தாலும் பரவாயில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: