Followers

Saturday, May 19, 2018

ஜாதக அனுபவம்


வணக்கம்!
          உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் எல்லாம் பார்த்து நாம் பலனை சொன்னாலும் உங்களின் நட்சத்திரம் என்ன மற்றும் இராசி என்ன என்பதை அறிந்துக்கொண்டு அதன் குணாதியசம் என்ன என்பதை பார்த்துவிட்டு பலனை சொன்னால் அது நூறு சதவீதம் சரியாக இருக்கும்.

கிரகங்கள் இந்த பலனை கொடுக்கிறது. ஜாதகத்தில் ஒரு கிரகத்தின் தசா இப்படி வேலை செய்து பலனை கொடுக்கிறது என்றாலும் அந்த ஜாதத்தில் இராசி என்ன என்று பார்த்துவிட்டால் அதன் குணாதியசத்திற்க்கு தகுந்தார்போல் தான் பலன் இருக்கும். அதே போல நட்சத்திரத்தின் பலனையும் நாம் தெரிந்துக்கொண்டால் சரியாக இருக்கும்.

ஒரு சிலருக்கு நல்லது நடக்கும் நேரத்தில் அவர்களின் இராசியின் குணம் பிடிவாதமாக இருப்பார் என்றால் கண்டிப்பாக இவர் பிடிவாதமாகவே இருந்து நல்லது நடைபெறுவதை தட்டிக்கழித்துவிடுவார். இழப்பு என்பது அவருக்கு வந்துவிடும்.

இதனை எல்லாம் தெரிந்துக்கொண்டு நம்முடைய ஜாதகம் இப்படி தான் இருக்கின்றது என்பதை புரிந்துக்கொண்டு வருகின்ற அனைத்து வாய்ப்பையும் ஏற்றுக்கொண்டால் நல்லது உங்களுக்கு தான் நடக்க ஆரம்பிக்கும்.

இராசியின் குணாதியசத்திற்க்கு மட்டும் வாழாமல் கொஞ்சம் மாறியும் வாழ்ந்து பாருங்கள். நல்ல நல்ல வாய்ப்பை நீங்கள் பெற்றுவிடலாம். நிறைய பேர் பிடிவாதமாக மட்டும் இல்லாமல் ஒவ்வொரு குணாதிசயத்தை பெற்றுக்கொண்டு அதற்காக வாழ்ந்து வீணாக போய்விடுகின்றார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Kalairajan said...

அய்யா
நட்சத்திரப்படி உள்ள குணங்களை மாற்ற நினைத்தாலும் கர்மவினைப்படி பலனை சாதாரண மனிதன் அனுபவித்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்