Followers

Thursday, May 31, 2018

விதி வீட்டை சுற்றும்பொழுது


வணக்கம்!
          வீட்டைசுற்றி விதி ஆட்டம்போடுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அதாவது நிறைய பிரச்சினைகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றது. ஒரு பிரச்சினையும் தீர்ந்தபாடில்லை என்பதை தான் வீட்டை சுற்றி விதி ஆட்டம் போடுகின்றது என்று சொல்லுகிறேன். 

ஒருவருக்கு வீட்டைச்சுற்றி விதி ஆட்டம் போட்டால் அவர் செய்யவேண்டியது சாமியார் போல் ஒரு கோவிலையும் விடாமல் சென்று வருவது தான் தீர்வாக இருக்கமுடியும். கோவில் கோவிலாக சுற்றினால் உடனே பிரச்சினை தீர்ந்துவிடாது கொஞ்ச நாள்கள் எடுத்துக்கொண்டு பிரச்சினை தீர்ந்துபோகும்.

ஒரு சில இடத்தில் சொல்லுவார்கள் எவ்வளவு பிரச்சினை வந்தாலும் எதிர்த்து நிற்கவேண்டும் ஓடகூடாது என்பார்கள். அவன் அவனுக்கு வந்தால் தான் பிரச்சினை என்ன என்பது தெரியும். யார் வேண்டுமானாலும் உபதேசம் எல்லாம் செய்யலாம் ஆனால் பிரச்சினையை நேரில் எதிர்க்கொள்ளும்பொழுது மட்டுமே உண்மை என்பது புரியும்.

இந்த நேரத்தில் சந்நியாசி எப்படி செல்வார் என்பதை உணர்ந்துக்கொண்டு அவர்களை போல நீங்களும் சுற்றிக்கொண்டே இருங்குள். கோவில் கோவிலாக சுற்றுங்கள். கண்டிப்பாக ஒரு தெளிவு உங்களுக்கு கிடைக்கும்.

விதி அடிக்கும்பொழுது எதிர்த்து நிற்பது என்பது அவ்வளவு எளிதான ஒரு காரியம் கிடையாது. முடிந்தவர்கள் எதிர்த்து நின்று பாருங்கள். முடியாதவர்கள் கோவில் கோவிலாக அலைந்து திரியுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: