Followers

Monday, May 14, 2018

இளைஞர்களுக்காக


வணக்கம்!
          நிறைய பேர் ஜாதககதம்பம் படிக்கும் இளைஞர்கள் இருக்கின்றனர். நல்ல ஆன்மீகவாதியாகவும் இருக்கின்றனர். ஆன்மீக தேடலுடன் பல கோவில்கள் மற்றும் யாத்திரை எல்லாம் சென்று வருகின்றனர். இது நல்லது தான். அதே நேரத்தில் காலத்தோடு திருமணமும் செய்துக்கொள்ளுங்கள்.

திருமணம் செய்யாமல் பலர் கோவில் கோவிலாக சென்றுக்கொண்டு இருப்பதும் தெரிகிறது. திருமணம் செய்யாமல் கோவிலுக்கு சுற்றிக்கொண்டு இருந்தால் அது உங்களுக்கு ஆன்மீகம் பக்கம் மட்டுமே இழுத்து செல்லும். திருமணத்தை நடத்துவதற்க்கு வாய்ப்பை வழங்காமல் கூட செல்லலாம்.

திருமணம் செய்துக்கொண்டு ஆன்மீக தேடுதலை தொடருங்கள். ஆன்மீகத்திற்க்கு திருமணம் ஒரு தடை கிடையாது திருமணம் செய்துக்கொண்டு ஆன்மீக தேடுதலை வைத்துக்கொள்ளலாம். திருமணம் செய்யாமல் கோவிலுக்கு சென்றேக்கொண்டே இருக்கவேண்டாம்.

திருமணம் நடைபெறாமல் இருப்பதற்க்கு பலரின் எதிர்பார்ப்பும் ஒரு குறையாகவே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வயதை கடந்துவிட்டால் திருமணத்தில் பெரிய எதிர்பார்ப்பை வைக்கவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பணம் போனால் சம்பாதித்துவிடலாம் ஆனால் வயது போனால் ஒன்றும் செய்யமுடியாது. முடிந்தவரை ஒரு குறிப்பிட்ட வயதிற்க்குள் திருமணம் செய்துக்கொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: