Followers

Thursday, May 24, 2018

கிரக தாக்குதல்


வணக்கம்!
          ஒரு ஜாதகருக்கு ஒரு பெரிய பாதிப்பு ஏற்பட்டால் அந்த பாதிப்பில் இருந்து வெளிவருவதற்க்கு பல வருடங்கள் கூட ஆகலாம். ஒரு வழிபாட்டை மட்டும் செய்துவிட்டு உடனே அதில் இருந்து வந்துவிடலாம் என்றால் கண்டிப்பாக அது ஆகாத ஒன்றாகவே இருக்கும்.

ஒருவர்க்கு கடன் பிரச்சினை ஏற்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த கடன் பிரச்சினையில் இருந்து அவர் தப்பித்து வருவதற்க்கு ஒரு சில காலங்கள் எடுக்கும். கிரகங்கள் ஒருவரை அடிக்கும்பொழுது அது உடனே வெளியே வராதபடியாக தான் செய்யும். நீண்டகால கஷ்டத்தை கொடுத்து தான் அது செய்யும்.

உடனே ஒருவர் வருவார் என்றால் அது கோடியில் ஒருவராக இருக்கலாம் அல்லது கடவுள் அவர் பக்கம் வந்து நிற்கிறார் என்று தான் அர்த்தம். கடன் பிரச்சினையில் இருந்து மீண்டு வருகின்றார் என்றால் கண்டிப்பாக அது பெரிய விசயமாக தான் இருக்கும்.

கிரகங்கள் ஒருவரை தாக்கும்பொழுது அந்த ரணம் என்பதை உடனே சரிசெய்ய விடாமல் என்ன செய்யவேண்டுமோ அந்த மாதிரி தான் தாக்க ஆரம்பிக்கும். தீயகிரகங்களின் தாக்குதல் அப்படி தான் இருக்கும். 

ஒரு கிரகம் ஒருவருக்கு கெடுதலை கொடுத்த பிறகு அவர்களுக்கு மறுபடியும் நல்லதை கொடுக்க நல்ல கிரகங்கள் உடனே முன்வரவும் வராது. வழிபாடு மற்றும் பரிகாரங்கள் வேலை செய்யாத என்று கேட்கலாம். வேலை செய்யும் அதற்குரிய காலத்தை எடுத்துக்கொண்டு வேலை செய்ய ஆரம்பிக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: