Followers

Thursday, May 3, 2018

கிரக தாக்குதலில் இருந்து விடுபட பரிகாரம்


வணக்கம்!
          ஒருவருக்கு ஏதோ ஒரு கிரகம் அதிகமாக தீங்குதல் தருகின்றது என்ற நேரத்தில் அவர் தன்னுடைய வழக்கமான செய்யும் செயலில் இருந்து மாறி புதியதோர் வழி முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆடைகளில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். தினமும் ஒவ்வொரு ஆடைகளை அணியும் நபராக நீங்கள் இருந்தால் அதனை மாற்றிக்கொண்டு இரண்டு ஆடைகளை வைத்துக்கொண்டு அதனை மாற்றி மாற்றி அணியவேண்டும். 

தினமும் அலுவலகம் சென்று வரும் நபராக இருந்தால் வீட்டிற்க்கு வந்தவுடன் வெறும் லுங்கியை மட்டும் அணிந்துக்கொண்டு இருக்கவேண்டும். மேல் ஆடை இல்லாமல் இருக்கலாம். வெறும் தரையில் படுத்து உறங்கவேண்டும். 

வெறும் தரையில் படுத்து உறங்கவேண்டும் வேண்டுமானால் ஒரு துணியை மட்டும் தரையில் விரித்து படுக்கவேண்டும். குளிர்ப்படுத்தப்பட்ட அறையாக இருக்ககூடாது. வெறும் மின்விசிறி இருந்தால் போதும்.

அதிகதூரம் நடந்துச்செல்லவேண்டும். குறைந்தது தினமும் ஐந்து கிலோ மீட்டருக்கு குறைவில்லாமல் நடக்கவேண்டும். நகர்புறத்தில் நீங்கள் இருந்தால் நான்கு பஸ் ஸ்டாப்பிற்க்கு முன்னதாகவே இறங்கி நடந்து உங்களின் வீட்டிற்க்கு செல்லுங்கள்.

நிறைய அலைச்சலை நீங்களே ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். பிறர்க்கு பலன் எதிர்பார்க்காமல் அவர்களின் வேலையை செய்துக்கொடுக்கவேண்டும். தாடி வளர்ப்பது போல உங்களுக்கு இருந்தால் தாடி வளர்த்துக்கொள்ளுங்கள். 

காவி உடை அல்லது கருப்பு கலரில் உள்ள உடைகளை அணிந்துக்கொண்டு இருங்கள். இது நீங்கள் கோவிலுக்கு செல்லும்பொழுது கடைபிடிக்கலாம். செறுப்பு இல்லாமல் நடப்பதும் நல்லது. இப்படி செய்தால் தீயகிரகங்களின் பலன் குறையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: