Followers

Tuesday, January 19, 2016

கட்டண பதிவை பற்றி


வணக்கம்!
          கட்டண ஆன்மீக பயிற்சி பதிவை பதிவில் இதுவரை அதிகம் சொல்லாமல் இருந்தேன். அதிக கூட்டம் தேவையில்லை என்ற ஒரே காரணம் மட்டுமே. அதனை ஆரம்பிக்கும்பொழுது இந்த நண்பர்கள் மட்டும் இணைந்தால் போதும் என்று நினைத்தேன். நான் எதிர்பார்த்த மாதிரியே இணைந்தவர்கள் அனைவரும் என்னோடு நெருங்கிய நண்பர்களை சேர்ந்தவர்கள். அம்மன் அருளால் அவர்கள் நன்றாகவே இருக்கின்றார்கள்.

பல நண்பர்கள் என்னிடம் தொடர்புக்கொண்டு ஆன்மீகபயிற்சிக்கு பேரம் பேசினார்கள். அவர்களிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டேன் நீங்கள் இணையவேண்டாம். பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையில் இருந்து அவர்கள் அந்த பயிற்சியை செய்தால் நன்றாக இருக்கும்.

கட்டண பதிவை ஆரம்பித்தவுடன் ஜாதககதம்பத்தில் ஆன்மீகம் சம்பந்தப்பட்டதை குறைத்துக்கொண்டு சோதிடம் சம்பந்தமாகவே அதிகம் எழுதிக்கொண்டு இருக்கிறேன். 

பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் அதில் இணைந்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் அதில் இணையவேண்டாம்.

பாக்கியஸ்தானமும் களத்திரஸ்தானமும் பற்றி தான் ஜாதககதம்பத்தில் காலை பதிவில் பார்த்தோம். அது சம்பந்தமாக ஒரு விசயத்தை சொல்லவேண்டும். பல பேர்கள் இன்று காதல் திருமணம் செய்கிறார்கள். காதல் திருமணம் ஜாதி இனம் மொழி நாடு கடந்து காதல் திருமணம் செய்கிறார்கள். இன்னும் பல காரணம் எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். எது வேண்டுமானாலும் சொல்லட்டும்.

நாகரீக உலகத்தில் காதல் திருமணம் செய்தால் ஏதோ புனிதம் என்று நினைக்கலாம். என்னை பொறுத்தவரை காதல் திருமணம் செய்தால் இந்த பிறவியை அவன் வீணடித்துவிட்டான் என்று தான் அர்த்தம். 

காதல் திருமணம் ஒரு மனிதன் செய்யவே கூடாது. ஏன் செய்யகூடாது எதற்கு செய்யகூடாது என்பதை கட்டண பதிவில் இணைந்து தெரிந்துக்கொள்ளுங்கள். கட்டண பதிவில் இணையமுடியவில்லை என்றால் காதல் திருமணம் செய்யாமல் இருங்கள் அது மட்டும் உங்களுக்கு நான் சொல்லும் உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Nam murai pennai kadhal thirumanam seythukondal?