Followers

Sunday, January 31, 2016

குடும்ப பாக்கியம்


ணக்கம்!
          ஒரு குடும்பத்தில் ஒருத்தர் மடடுமே சிந்தனை செய்யவேண்டும் அனைவரும் சிந்தனை செய்தால் குடும்பம் பிரச்சினையில் தான் இருக்கும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கும் மீதி உள்ளவர்களுக்கு அனைவருக்கும் நன்றாக இருக்காது.

ஒரு குடும்பத்தில் அனைவரும் அறிவாளியாக இருந்தால் அந்த குடும்பம் பைத்தியமாக தான் இருக்கும். ஒருத்தர் மட்டும் சிந்தித்து குடும்பத்தை நடத்தவேண்டும். தற்காலத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரும் சம்பாதிக்கலாம் ஆனால் சம்பாதிக்கும் அனைவரும் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கட்டுபட்டு நடக்கும்பொழுது மட்டுமே குடும்பம் சிறக்கும்.

ஒரு சில நடிகர்களின் குடும்பத்தை பார்த்தால் அனைவரும் நடிக்க வந்துவிடுவார்கள். அனைவரும் ஒருவர் பேச்சைக்கேட்டு இருக்கமாட்டார்கள் நான் சம்பாதிக்கிறேன் என் இஷ்டம் போல் தான் வாழ்வேன் என்று இஷ்டத்திற்க்கு இருப்பார்கள். கடைசியில் அந்த குடும்பம் வீணாக போய்விடும்.

பெரிய நடிகரை பாருங்கள் அவர் ஒருவரே போதும் ஆனால் அவரின் மகள்களையும் சினிமாவில் இறக்கிவிட்டு நடிக்க வைத்து அவர்களுக்கு ஒரு நல்ல குடும்பம் அமையாமல் போய்விடும். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் வாரிசு வரவேண்டும் அதே நேரத்தில் அந்த குடும்பத்திற்க்கு உரிய கடமையை செய்துவிடவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, January 30, 2016

ஆட்சி


வணக்கம்!
          பாக்கியஸ்தான அதிபதி பாக்கியஸ்தானத்தில் இருந்தால் என்ன பலன் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். ஆட்சியில் இருக்கிறார் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

ஆட்சியில் இருக்கும்பொழுது எடுத்த அனைத்த காரியங்களும் தடையின்றி நடக்கும். பல புண்ணியகாரியங்களை செய்பவர்களாக இருப்பார்கள். பல தேசம் சென்று புண்ணிய தீர்த்தங்களில் எல்லாம் நீராடிவிட்டுவருவர். 

புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது என்பது இந்து மதத்தில் உள்ள மிகப்பெரிய ஒரு செயலாக இருப்பதால் இதனை சொல்லுகிறேன். புண்ணியதீர்த்தங்களில் நீராடுவது என்பது நல்ல காரியம் இதனை செய்வார்களாக இருப்பார்கள். இதற்கும் நமக்கு பாக்கியம் இருக்கும்.

வெளிநாடுகளில் நிரந்தரமாக தங்கும் வாய்ப்பை பெற்றவர்களாக இருப்பார்கள். வெளிதேசங்களை குறிப்பதால் வெளிநாடுகளில் இவர்களின் காரியங்கள் எளிதில் நடக்கும்.

தீயகிரங்களின் பார்வை அல்லது இந்த வீடு பாதிப்படைவது போல் இருந்தால் மேலே சொன்ன காரியங்களுக்கு எதிராக நடக்கும். அவர் அவர்களின் ஜாதகத்தைப்பொறுத்த பலன் மாறும். எப்படி பாதிக்கப்பட்டாலும் ஒரளவு நன்மையை இந்த அமைப்பு வழியாக எதிர்பார்க்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 29, 2016

பயண அனுபவம்


ணக்கம்!
          நமது பயணத்திட்டத்தின்படி முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்டுவிடுவேன். நான் அறிவித்தப்படி அந்த ஊர்க்கு கண்டிப்பாக சென்றுவிடுவேன். தற்பொழுது கோயம்புத்தூர் சென்று வந்தேன். கோயம்புத்தூர் சென்றது ஒருவருடைய வேலைக்காக சென்றேன். 

ஒவ்வொருவரின் ஊருக்கும் செல்லும்பொழுது அவரின் வேலையை முடித்துவிட்டு ஒய்வு நேரத்தில் நமது நண்பர்களை சந்திப்பது வழக்கம். பல நண்பர்கள் நான் சென்று வந்த பிறகு என்னை தொடர்புக்கொள்கிறார்கள். முன்கூட்டியே என்னிடம் சொல்லிவிட்டால் உங்களை நானே தொடர்புக்கொண்டு சந்தித்துவிடுவேன்.

தற்பொழுது கோயம்புத்தூர் செல்லும்பொழுது கூட சம்பந்தப்பட்ட நபரை தவிர ஒரு நண்பர் மட்டும் தொடர்புக்கொண்டார். அவரை சந்தித்தேன். அந்த ஊரில் இருந்து வந்த பிறகு நமது நண்பர்கள் தொடர்புக்கொள்கிறார்கள். தினமும் பதிவை படிக்காததால் இப்படி நடைபெறுகிறது. முன்கூட்டியே நான் தெரிவித்துவிடுகிறேன். அதேப்போல் நீங்களும் என்னை முன்கூட்டியே தொடர்புக்கொண்டு சொல்லிவிடுங்கள்.

பழனி முருகனை தரிசனம் செய்ய செல்கிறேன். முதல் பயணம் இது. எந்த தேதி என்று இதுவரை முடிவு செய்யவில்லை. பழனி சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் என்னை தொடர்புக்கொள்ளலாம். 

அடுத்தடுத்த பயணம்.

வேதாரண்யம்
ஈரோடு பவானி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 27, 2016

பாக்கியஸ்தான பரிகாரம் எட்டாவது வீடு


வணக்கம்!
          பாக்கியஸ்தானம் மற்றும் எட்டாவது சம்பந்தப்பற்றை இதுவரை பார்த்த வந்தோம். இப்படிப்பட்ட அமைப்பு இருப்பவர்கள் ஒரு வித சோம்பலில் இருந்துக்கொண்டே இருப்பார்கள்.

பாக்கியஸ்தானம் மற்றும் எட்டாவது வீட்டிற்க்குரிய காரியத்துவம் இருக்கும் விசயத்தை கவனித்தல் மிக சிறந்த பலனை தரும். அதாவது நாம் செய்யும் பரிகாரம் எல்லாம் சிவன் அல்லது அழிக்கும் தெய்வங்களாக பார்த்து பரிகாரம் செய்தாலே போதும்.

ஒரு சில இடத்தில் எமனை வைத்து கூட வழிபாடு நடத்திக்கொண்டு இருக்கின்றனர். அப்படிப்பட்ட கோவிலாக பார்த்து வழிபாட்டை நடத்தும்பொழுது இந்த மாதிரியான பாதிப்புகளில் இருந்து தன்னை காத்துக்கொள்ளலாம்.

உங்களின் ஜாதகத்தை கொண்டு அந்த வீட்டைப்பற்றி முழுமையாக அறிந்துக்கொண்டு அது எந்த கோவில் என்பதை தெரிந்துக்கொண்டு அந்த கோவிலில் பரிகாரம் அல்லது வழிபாட்டை நடத்தி வாருங்கள் போதுமான ஒன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

வெளிநாடு


வணக்கம்!
          பாக்கியஸ்தான அதிபதியும் எட்டாவது வீட்டு அதிபதியும் சம்பந்தப்பட்டு இருக்கும்பொழுது ஒரு சிலர் குடும்பத்தை விட்டு வெளியில் சென்று தங்கிவிடுவார்கள்.

வெளிதேசங்களுக்கு சென்று வாழ்பவர்களாக இருப்பார்கள். தற்பொழுது அனைவரும் குடும்பத்தை விட்டு தான் வெளியில் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் எப்படி என்றால் பல வருடங்கள் வீட்டிற்க்கே திரும்பாத ஒரு நிலையில் வசிப்பவர்களாக இருப்பார்கள்.

எங்கள் பகுதியில் அதிகமாக டிராவல் என்று சொல்லக்கூடிய விசாவில் சிங்கபூர் செல்வார்கள். இவர்கள் அப்படியே அங்கேயே தங்கிவிடுவார்கள். இவர்கள் பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு மேல் அங்கு வசிப்பவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு எல்லாம் இப்படிப்பட்ட தசா நடந்துக்கொண்டிருக்கும். இவர்களில் ஒரு சிலர் வீட்டில் கூட தொடர்பு இல்லாமல் வாழ்ந்துக்கொண்டும் இருக்கின்றார்கள். வீட்டை விட்டு பிரிந்து எந்த வித தொடர்பும் இல்லாமல் இருப்பதை இப்படிப்பட்ட கிரகசம்பந்தம் செய்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 26, 2016

தந்தை வழி சொத்து


ணக்கம்!
          தந்தை வழி சொத்துகளை குறிக்கும் ஒன்பதாவது வீடு எட்டாவது வீட்டில் சம்பந்தப்படும்பொழுது தந்தை வழிச்சொத்துகள் பிரச்சினையை கொடுக்ககூடிய வகையில் இருக்கும்.

தந்தை வழி சொத்துக்கள் இன்றைய தேதியில் கிராமங்களில் எல்லாம் வம்பு வழக்குகளை சந்தித்துக்கொண்டு இருக்கின்றது. ஒரு ஊரில் ஐம்பது வீடுகள் இருந்தால் அதில் நாற்பது வீடுகளின் சொத்துக்கள் வம்பு வழக்குகளை சந்திக்கிறது.

கொஞ்ச காலத்திற்க்கு முன்பு பஞ்சாயத்து செய்து தீர்த்து வைத்தனர். இன்றைய காலத்தில் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு வருவதற்க்குள் ஒரு தலைமுறையே வாழ்ந்து முடித்துவிடுகிறது.

கோர்ட்டில் வழக்கு இழு இழு என்று இழுத்தடிக்கும் செயல் எல்லாம் இப்படிப்பட்ட அமைப்பு ஜாதகத்தில் இருக்கும். இதற்கு பேசியே அனைத்தையும் தீர்த்துக்கொள்ளலாம்.

ஜாதகத்தை பார்த்து ஜாதகத்தில் எப்படி கிரகங்கள் இருக்கின்றன என்பதை அறிந்துக்கொண்டு அதன்படி நாம் வாழகற்றுக்கொண்டால் இதனை எல்லாம் தவிர்க்கலாம். யார் இதனை எல்லாம் பார்க்கிறார்கள் இரத்தம் இருக்கின்ற வரை வம்புக்கு தானே நிற்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பாக்கியஸ்தானம் எட்டாவது வீடு தரும் செல்வம்


ணக்கம்!
          பாக்கியஸ்தான அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்படும்பொழுது இறப்பு சம்பந்தமான பணவரவுகள் வரும். பணவரவு அதிகப்பட்சமாக வருவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது.

எனக்கு தெரிந்த ஒரு நபர் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தார். அவரின் அக்கா வீட்டு பையன் பெரிய கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு அதிகமான சொத்துக்கள் இருந்தன.

அவர் குடும்பத்தோடு செல்லும்பொழுது ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரின் மனைவி மற்றும் அவரின் பையனும் அந்த விபத்தில் இறந்துவிட்டார்.

அக்கா மற்றும் அக்கா கணவர் இருவரையும் தன்னிடம் அழைத்துக்கொண்டு வந்து வீட்டில் வைத்தார். அவர்கள் சொத்து அனைத்தையும் இவரிடம் கொடுத்துவிட்டு எங்களை கடைசி வரை பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டார்கள்.

இவருக்கு பெரிய அளவில் பணம் கிடைத்தது. தற்பொழுது நல்ல வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். நண்பருக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருந்தது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 25, 2016

பாக்கியஸ்தானத்தை பலப்படுத்த


வணக்கம்!
          பாக்கியஸ்தானம் நன்றாக இல்லை என்றாலும் அந்த நபர் பாக்கியஸ்தானத்திற்க்கு உரிய வேலையை செய்தார் என்றால் அவருக்கு ஒரளவு நல்ல வழியை கிரகங்கள் ஏற்படுத்திக்கொடுத்துவிடும்.

பாக்கியஸ்தானத்தில் உள்ள ஒரு காரத்துவம் ஆலயங்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வது. ஒரு கோவில் கட்டிக்கொண்டிருந்தால் அந்த கோவிலுக்கு தகுந்த பொருட்களை நம்மால் வாங்கிக்கொடுப்பது போன்ற வேலையை செய்தாலே போதும் நமக்கு பாக்கியஸ்தானம் நல்ல வழியை காட்டிக்கொடுத்துவிடும்.

பெரும்பாலும் நமது நண்பர்களுக்கு பரிகாரம் என்று செய்யும்பொழுது அவர்களுக்கு உதவ நான் பல கோவிலுக்கு இப்படி உதவி செய்துவிடுவது உண்டு. கோவில் கட்டிக்கொண்டிருந்தால் அந்த கோவிலுக்கு தேவையான பொருட்களை வாங்க பணத்தை அல்லது பொருட்களை வாங்கிக்கொடுத்துவிடுவேன்.

இப்படி செய்வது எல்லாம் நான் வழக்கமாக கொண்டிருந்தாலும் அதனைப்பற்றி தகவல்களை வெளியில் சொல்லுவதில்லை. வாடிக்கையாளர்களின் பணத்தை வைத்து செய்வதால் அதனை பதிவில் போடுவதும் கிடையாது.

ஒருவருக்கு இப்படி செய்யும்பொழுது மட்டுமே அவர்களுக்கு நன்மை வழங்க முடியும். நாம் செய்வது அவர்களுக்கு உதவும். இதனை நீங்களும் செய்து பாக்கியஸ்தானத்தை பலப்படுத்திக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மறைப்பொருட்கள்


ணக்கம்!
          பாக்கியஸ்தான அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்படும்பொழுது எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை பார்த்து வருகிறோம். மேலும் ஒரு சில கருத்துகளைப்பற்றி பார்க்கலாம்.

எட்டாவது வீடு மறைமுகமான ஆராய்ச்சியைப்பற்றி குறிக்கும் வீடாக இருப்பதாலும் ஒன்பதாவது வீடு ஆன்மீகத்தைப்பற்றி காட்டுவதாலும் இந்த பிரபஞ்ச ரகசியத்தை அறியும் விஞ்ஞானிகளாக இருப்பார்கள்.

மறைப்பொருட்களை பற்றி ஆராய்ச்சி செய்து வெளியிடும் விஞ்ஞானிகளுக்கு இந்த மாதிரியான அமைப்பு இருக்கும். உயர்கல்வியை தரும் அமைப்பு விரையவீட்டில் இருந்தாலும் உயர்கல்வி மறைப்பொருட்கள் சம்பந்தப்பட்ட படிப்பாக இருக்கும்.

மரணத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்ய போகும்பொழுது தானே ஞானிகளாக மாறுகிறார்கள். அவர்களுக்கும் இப்படி தான் இருக்கும். அதே நேரத்தில் இவர்கள் பேசும் பேச்சு தத்துவம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். 

செவ்வாய் மற்றும் புதன்கிழமையில் கோயம்புத்தூரில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, January 24, 2016

பாக்கியஸ்தானம்


ணக்கம்!
          பாக்கியஸ்தானம் எட்டாவது வீட்டோடு தொடர்புக்கொள்ளும்பொழுது மரணம் ஏற்படுவது ஒரளவு நல்ல முறையில் அமையும். ஞானம் அடைந்தவர்களாக ஜாதகர் இருப்பார்.

மரணத்தை கூட யோகமாக தான் நமது இந்து மதத்தில் பார்க்கிறார்கள். ஒருவருக்கு எப்படி மரணம் ஏற்படும் என்பதையும் ஜாதகத்தில் சொல்லி வைத்துள்ளார்கள். அனைத்தையும் எழுதியுள்ளதால் எப்படிப்பட்ட மறுஜென்மம் அல்லது மோட்சம் கிடைக்கும் என்பதையும் நாம் தெரிந்துக்கொள்ளமுடியும்.

பாக்கியம் மரணவீட்டில் சம்பந்தப்படும்பொழுது மரணம் கூட நல்லவிதத்தில் அமையும். ஒரு சில சாமியார்களுக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும். அவர்களின் மரணம் ஒரு ஜெயந்தியாக போற்றப்படுகிறது அல்லவா அவர்களுக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும்.

சாமியார்களுக்கு இது நல்லது. இல்லறத்தில் இருப்பவர்களுக்கு அந்தளவுக்கு பயன் தருவதில்லை. நல்ல இறைவழிபாடு இருந்தால் ஒரளவு சமாளிக்கலாம். இப்படிப்பட்ட அமைப்பு உங்களுக்கு இருந்தால் சிவவழிபாடு செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, January 23, 2016

வேண்டுகோள்


வணக்கம்!
          பெரும்பாலான நண்பர்கள் என்னிடம் சோதிடம் பார்த்துவிட்டு சார் நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன். எனக்கு பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்கின்றது என்று சொல்லுவார்கள். இது எதனால் சொல்லுகின்றார்கள் என்றால் நான் அதிக பணம் கேட்ககூடாது என்பதற்காக இதனை சொல்லுகின்றார்கள்.

என்னைப்பொறுத்தவரை  அனைவரையும் சமமாக தான் பார்ப்பேன். பணம் இல்லை என்பவர்களுக்கும் சரி யாராக இருந்தாலும் அவர்களுக்கு அம்மனின் ஆசி உண்டு என்பதை சொல்லுவது உண்டு. நான் செய்வதும் உண்டும்.

நீங்கள் பரிகாரம் செய்துக்கொடுங்கள் என்று கேட்டால் அதற்கு பணம் வாங்கி தான் ஆகவேண்டிய நிர்பந்தம் எனக்கு இருக்கின்றது. அதற்கு காரணம் தற்பொழுது பார்த்துக்கொண்டு வருகின்ற பாக்கியஸ்தானத்திற்க்கு மற்றும் எனது வழிகாட்டிக்கு எல்லாம் பணம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்கின்றது.

அவர்களுக்கு எல்லாம் பணம் கொடுத்துவிட்டு அதற்குரிய பரிகாரத்தை செய்ய ஆரம்பிப்பது உண்டு. இதனை எல்லாம் கொடுக்காமல் நீங்கள் பரிகாரம் செய்துக்கொடுங்கள் என்று உங்களின் கதையை சொல்லிக்கொண்டு வந்தால் என்னால் உங்களிடம் எதுவும் சொல்லமுடியாமல் அப்படியே விட்டுவிடுவேன்.

புதிதாக வரும் நண்பர்கள் இதனை உணர்ந்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் நடந்துக்கொள்ளுங்கள் என்று அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பாக்கியஸ்தானமும் எட்டாவது வீடும்


வணக்கம்!
          பாக்கியஸ்தானம் எட்டாவது வீட்டில் தொடர்புக்கொண்டால் எப்படிப்பட்ட பலனை கொடுக்கும் என்பதை பார்க்கலாம். ஒன்பதாவது வீட்டுக்கு எட்டாவது வீடு விரையம் அதோடு எட்டாவது வீடு மறைவு ஸ்தானம்.

பாக்கியஸ்தானம் கெட்டுவிட்டது என்று அர்த்தம் கொள்ள வேண்டியது தான். பாக்கியஸ்தானம் கெட்டாலே ஒன்றும் அந்தளவுக்கு பலனை எதிர்பார்க்க முடியாது. வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் நோய் வந்து மருத்துவமனையிலேயே கிடப்பார்கள். கையில் உள்ள பணம் மற்றும் சொத்தை எல்லாம் விற்று மருத்துவம் பார்க்கவேண்டிய நிலை ஏற்படலாம்.

வீட்டில் உள்ளவர்கள் அதிகம் இந்த தசாவில் இறக்க கூட நேரிடும். ஒரு சிலருக்கு அப்படி நடக்கவாய்ப்பு இருக்கின்றது. எல்லோரும் பயப்படதேவையில்லை ஒரு சில ஜாதகங்களில் நான் பார்த்து இருக்கிறேன். அந்த வீட்டில் அதிகமான இறப்பு ஏற்பட்டு இருக்கின்றது.

மறைவு ஸ்தானம் என்றவுடன் மரணத்தை மட்டும் கொடுக்கும் ஒரு செயலை மட்டும் செய்யாது. நல்லதையும் தரக்கூடிய நிகழ்வுகளும் நடக்கும். பல பேர்களுக்கு அதிர்ஷ்டமாக கூட இப்படிப்பட்ட அமைப்பில் நடந்து இருக்கின்றது. யோகம் அடித்தது கூட உண்டு.

ஒரு சிலர் நேர்வழி இல்லாமல் மறைமுகமான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதிரி அமைப்பு இருக்கும். அவர் அவர்களின் ஜாதகத்தை பொறுத்து இதன் பலனை அறியவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 22, 2016

விளக்கம்



வணக்கம்!
          காதல் திருமணத்தைப்பற்றி சொல்லும்பொழுது பல நண்பர்கள் அந்த கருத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பல நண்பர்கள் பாராட்டவும் செய்தனர்.

ஜென் மதத்தில் ஒரு கருத்து எனக்கு பிடிக்கும். அதன் முழு சாராம்சமும் என்ன என்றால் உனக்கு என்ன தேவையோ அதனை பிறர்க்கு செய். உனக்கு என்ன தேவையில்லையோ அதனை பிறர்க்கு செய்யாதே என்பது தான். இது எனக்கு பிடித்த ஒன்று.

ஒரு சில கருத்துக்கள் எனக்கு காலதாமதமாக கிடைத்தன. அந்த கருத்து முன்பே எனக்கு கிடைத்து இருந்தால் இன்னமும் நன்றாக வாழ்ந்திருப்பேன். என்ன செய்வது நமது விதி அப்படி இருக்கின்றது.

நான் எனக்கு தேவையானவற்றை சொல்லிவிடுகிறேன். உங்களுக்கு தேவைப்பட்டால் அதனை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையில்லை என்றால் அதனை விட்டுவிடுங்கள் அதுபோலதான் காதல் திருமண கருத்தும். காதல் திருமணம் செய்யகூடாது என்று சொல்லிருக்கிறேன். இதனை ஒருவர் எடுத்துக்கொண்டு அதனை பின்பற்றினாலே போதுமான ஒன்று.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கூட்டுத்தொழிலும் பாக்கியஸ்தானமும்


ணக்கம்!
          பாக்கியஸ்தானமும் களத்திரஸ்தானமும் சேரும்பொழுது நீங்கள் செய்யும் கூட்டுத்தொழிலும் நன்றாக இருக்கும். இன்று பல பேர்கள் கூட்டு தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். கூட்டு தொழில் செய்யும்பொழுது உங்களுடைய பார்ட்னர் நல்லவராக இருந்தால் கூட்டு தொழில் நன்றாக செல்லும். பார்ட்னர் சரியில்லை இல்லை என்றால் கூட்டு தாெழில் நஷ்டத்தை சந்திக்கும்.

கூட்டு தொழில் செய்யும் இடத்தை ஜாதகத்தில் காட்டும் இடம் ஏழாவது வீடு அந்த இடத்தைக்கொண்டு தான் கூட்டுத்தொழில் நன்றாக இருக்குமா என்று தீர்மானிக்க முடியும். ஏழாவது வீடு நன்றாக இருந்தாலே கூட்டுத்தொழில் செய்யலாம்.

களத்திரஸ்தானத்தோடு பாக்கியஸ்தானமும் சேரும்பொழுது கூட்டுத்தொழில் நன்றாக செல்லும். இன்றைக்கு பல பெரிய கம்பெனிகளை நடத்திக்கொண்டு இருப்பது கூட்டாக தான் செய்கிறார்கள். அதில் ஒருவருக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருந்தால் கூட போதும் கம்பெனியின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கும்.

பல பேர்களுக்கு பாக்கியஸ்தானமே நன்றாக இருப்பதில்லை இதில் எங்கு கூட்டுத்தொழில் ஆரம்பிப்பது. அதிலும் பல பேருக்கு அவர்களின் மனைவி கூட சரியாக அமைவதில்லை. இப்படிப்பட்டவர்கள் இறைவனை சரணடைந்து தான் ஆரம்பிக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 21, 2016

பாக்கியஸ்தானம்


ணக்கம்!
          பாக்கியஸ்தான அதிபதியும் ஏழாவது வீட்டு அதிபதியும் சம்பந்தப்படும்பொழுது நல்ல வாழ்க்கை அமையும். கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்வார்கள்.

இரண்டு அதிபதியும் கெட்டாலும் நமது சமுதாயம் இருவரையும் வாழவைக்க பல நல்லதை செய்யும். அதாவது இரண்டு பேருக்கும் பிரச்சினை வந்தால் அதனை சமாதானம் செய்து வைத்து அவர்களை வாழவைக்கும். 

தற்பொழுது இந்த கலாச்சாரம் கொஞ்சம் மாறுதல் அடைந்து வருகிறது என்றே சொல்லவேண்டும். கணவன் மனைவியை பிரிப்பதற்க்கு இரண்டு வீட்டார்களும் முயன்றுவருகின்றனர். நாகரீக சமுதாயம் என்று சொல்லிக்கொண்டு இதனை செய்து வருகின்றனர்.

நகரத்தில் தான் இப்படி என்றால் கிராமத்திலும் இது பரவலாக செய்ய ஆரம்பித்துவிட்டனர். கிராமத்தையும் இது விட்டுவைக்கவில்லை. நகரத்தில் கோர்ட்க்கு செல்லுகின்றனர். கிராமத்தில் பஞ்சாயத்திற்க்கு செல்கின்றனர். அவ்வளவு தான் வித்தியாசம் என்று சொல்லவேண்டும்.

எங்கு வசித்தாலும் பெரியவர்கள் இன்றைய சமுதாயத்திற்க்கு நல்லதை செய்யவேண்டும். சிறியவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கி அவர்களின் வாழ்விற்க்கு உறுதுணையாக இருந்தால் நல்லது. 

விதி அடிப்பது ஒரு வலி என்றால் பெரியவர்கள் அடிப்பது அதிகமாக இருக்கின்றது. கிரகங்கள் எப்படி இருந்தாலும் வழி காட்டுபவர் நன்றாக இருந்தால் நல்ல வாழ்க்கை வாழலாம்.


பல ஊர்களுக்கு பயணம் செய்யவேண்டிய அவசியம் இருக்கின்றது. ஒரு வாரம் சென்ற பிறகு ஒவ்வொரு ஊருக்காக வரவிருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இரு கண்கள்


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் களத்திரஸ்தானம் சம்பந்தப்படும்பொழுது எப்படி பலனை தரும் என்பதை பார்த்து வருகிறோம். குடும்பஸ்தானம் சம்பந்தப்படும்பொழுது ஒரு கருத்தை சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். அப்பொழுது சொல்லமுடியவில்லை இப்பொழுது சொல்லுகிறேன்.

இந்த காலத்தில் சம்பாதிப்பது தான் எல்லாவற்றிலும் மிகப்பெரிய அளவுகோலாக இருக்கின்றது. தனக்கு வரும் மாப்பிள்ளை இப்படி சம்பாதிக்கவேண்டும் வருடத்திற்க்கு இத்தனை லட்சம் சம்பாதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எப்படியோ இருந்துவிட்டு செல்லுகிறார்கள்.

ஒரு சிலர் நன்றாக சம்பாதிப்பார்கள் ஆனால் குடும்பத்தை நடத்துவதில் கோட்டை விட்டுவிடுவார்கள். அதாவது ஒழுங்காக நடத்த தெரியாமல் குடும்பம் பாதிக்கப்பட்டுவிடும். வெளியில் சம்பாதிக்கும் அளவுக்கு வீட்டை கவனிக்க தெரியாது. 

பெரிய அளவில் சம்பாதித்த முக்கால்வாசி பேருக்கு அவர்களின் குடும்பத்தை கவனிக்க நேரமில்லை என்று கூட குடும்பம் சரியாக அமையாமல் இருக்கின்றது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையாக சென்றுக்கொண்டு இருப்பார்கள்.

சம்பாதிக்கவும் வேண்டும் அதே நேரத்தில் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். இரண்டையும் இருகண்களாக பார்ப்பவர்கள் தான் நல்ல வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 20, 2016

கேள்வி & பதில்


வணக்கம்!
          நண்பர் கேள்வி கேட்டுருந்தார் அத்தை பெண்ணை காதல் திருமணம் செய்துக்கொள்ளலாமா என்று கேட்டார். காதல் திருமணம் என்றாலே அவர்களின் வாழ்க்கை அந்தளவுக்கு சரியாக இருப்பதில்லை. 

ஆன்மீகவாதிகள் பயப்பட்டுக்கொண்டு பல கருத்துகளை வெளியில் சொல்லமாட்டார்கள். வெளியில் இருந்தும் ஏதாவது மிரட்டல் வரும் நமக்கும் கூட்டம் சேராது என்ற காரணத்தால் வெளியில் சொல்லுவதற்க்கு பயப்பட்டுக்கொண்டு சொல்லுவதில்லை.

நான் அப்படி இல்லை எதனையும் வெளிப்படையாக சொல்லுவேன். பிடித்தால் வாருங்கள் பிடிக்காவிட்டால் வேற ஆளை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவது உண்டு. அனைவரையும் சமமாக பார்ப்பேன். சமமாக பழகுவேன்.  

ஒரு கருத்தை மறைக்ககூடாது. ஏன் செய்யவேண்டாம் என்று சொல்லுகிறேன் என்றால் உங்களின் பிறவி சங்கிலியை விட்டு வெளியில் சென்றுவிடுவீர்கள் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். அதே நேரத்தில் உங்களின் அத்தை பெண்ணாக இருக்கும் பட்சத்தில் நல்ல மருத்துவபரிசோதனை செய்துக்கொண்டு திருமணம் செய்துக்கொள்ளுங்கள்.

என்னை கேட்டால் காதல் திருமணம் என்பதை செய்யாமல் இருந்தால் நல்லது என்பேன். எத்தனையோ நல்ல கருத்தை சொல்லியதால் அதனை நீங்கள் ஏற்றுக்கொண்ட காரணத்தால் தான் இத்தனை வருடம் பின் தொடர்ந்து படித்து வருகிறீர்கள். உங்களுக்கு பெரிய ஒரு நல்லது செய்யவேண்டும் என்றால் இதனை தான் நான் சொல்லுவேன். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு காதல் திருமணம் மட்டும் செய்து வைக்காதீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பயணம் வரும் வழி


ணக்கம்!
          பாக்கியஸ்தான அதிபதியும் களத்திரஸ்தான அதிபதி சம்பந்தப்படும்பொழுது எப்படி இருக்கும் என்று நேற்று பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இதனை பார்க்கலாம்.

ஒரு சில நண்பர்களின் ஜாதகத்தை பார்க்காமலே அவர்களைப்பற்றி தெரியவரும். அவர்கள் செய்துக்கொண்டிருக்கும் வேலையை வைத்தே நாம் ஒரளவு புரிந்துக்கொள்ளலாம். அடிக்கடி பயணம் மேற்க்கொண்டு இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருக்கின்றது.

தொடர்பயணங்களை செய்துக்கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு எல்லாம் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கின்றது. வெளிநாடுகளுக்கு சென்று ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் தங்கிவிட்டு மறுபடியும் அடுத்த நாட்டிற்க்கு சென்றுக்கொண்டு இருப்பார்கள்.

பல நண்பர்களை நான் ஏர்போர்ட்டிற்க்கு சென்று சந்தித்தது உண்டு. ஒரு நாட்டிற்க்கு செல்லும்பொழுது அப்படியே ஏர்போர்ட்டிற்க்கு வரச்சொல்லுவார்கள். அவர்கள் அனைவரும் ஆன்மீகத்தை விரும்புபவர்களாக இருப்பார்கள். அவ்வளவு பிஸியாக இருக்கும் நபர்களாக இருப்பார்கள். 

வெளிநாட்டையும் அடிக்கடி பயணத்தை காட்டும் இடமாக இருப்பதாலும் அதே நேரத்தில் ஆன்மீகத்தை காட்டக்கூடிய இடமாக இருப்பதாலும் இப்படி இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 19, 2016

கட்டண பதிவை பற்றி


வணக்கம்!
          கட்டண ஆன்மீக பயிற்சி பதிவை பதிவில் இதுவரை அதிகம் சொல்லாமல் இருந்தேன். அதிக கூட்டம் தேவையில்லை என்ற ஒரே காரணம் மட்டுமே. அதனை ஆரம்பிக்கும்பொழுது இந்த நண்பர்கள் மட்டும் இணைந்தால் போதும் என்று நினைத்தேன். நான் எதிர்பார்த்த மாதிரியே இணைந்தவர்கள் அனைவரும் என்னோடு நெருங்கிய நண்பர்களை சேர்ந்தவர்கள். அம்மன் அருளால் அவர்கள் நன்றாகவே இருக்கின்றார்கள்.

பல நண்பர்கள் என்னிடம் தொடர்புக்கொண்டு ஆன்மீகபயிற்சிக்கு பேரம் பேசினார்கள். அவர்களிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டேன் நீங்கள் இணையவேண்டாம். பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையில் இருந்து அவர்கள் அந்த பயிற்சியை செய்தால் நன்றாக இருக்கும்.

கட்டண பதிவை ஆரம்பித்தவுடன் ஜாதககதம்பத்தில் ஆன்மீகம் சம்பந்தப்பட்டதை குறைத்துக்கொண்டு சோதிடம் சம்பந்தமாகவே அதிகம் எழுதிக்கொண்டு இருக்கிறேன். 

பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் அதில் இணைந்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் அதில் இணையவேண்டாம்.

பாக்கியஸ்தானமும் களத்திரஸ்தானமும் பற்றி தான் ஜாதககதம்பத்தில் காலை பதிவில் பார்த்தோம். அது சம்பந்தமாக ஒரு விசயத்தை சொல்லவேண்டும். பல பேர்கள் இன்று காதல் திருமணம் செய்கிறார்கள். காதல் திருமணம் ஜாதி இனம் மொழி நாடு கடந்து காதல் திருமணம் செய்கிறார்கள். இன்னும் பல காரணம் எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். எது வேண்டுமானாலும் சொல்லட்டும்.

நாகரீக உலகத்தில் காதல் திருமணம் செய்தால் ஏதோ புனிதம் என்று நினைக்கலாம். என்னை பொறுத்தவரை காதல் திருமணம் செய்தால் இந்த பிறவியை அவன் வீணடித்துவிட்டான் என்று தான் அர்த்தம். 

காதல் திருமணம் ஒரு மனிதன் செய்யவே கூடாது. ஏன் செய்யகூடாது எதற்கு செய்யகூடாது என்பதை கட்டண பதிவில் இணைந்து தெரிந்துக்கொள்ளுங்கள். கட்டண பதிவில் இணையமுடியவில்லை என்றால் காதல் திருமணம் செய்யாமல் இருங்கள் அது மட்டும் உங்களுக்கு நான் சொல்லும் உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்


ணக்கம்!
          பாக்கியஸ்தான அதிபதி ஏழாவது வீட்டோடு தொடர்புக்கொள்ளும்பொழுது என்ன பலனை தரும் என்பதை பார்க்கலாம். ஏழாவது வீடு களத்திரஸ்தானம். களத்திரஸ்தானத்தோடு தொடர்புக்கொள்ளும்பொழுது திருமணம் ஆனவுடன் சிறப்பான வாழ்வை வாழ்வார்கள்.

பல பேர்களுக்கு திருமணம் ஆனவுடன் தான் செட்டில் ஆவார்கள். திருமணம் முடிந்தபிறகு சம்பாதிக்க ஆரம்பிக்கும் ஆட்களும் இருக்கின்றார்கள் அவர்களுக்கு எல்லாம் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும்.

ஒரு சிலருக்கு திருமணம் ஆனவுடன் பிரச்சினை அதிகம் வந்துவிடும் அவர்களுக்கு இந்த மாதிரியான அமைப்பு இல்லாத காரணமாக கூட இருக்கலாம். மனைவி அமைவது கூட பாக்கியம் தான். நல்ல பாக்கியம் செய்து இருக்கிறான் அதனால் தான் நல்ல குணத்தோடு கூடிய மனைவி அமைந்தால் என்று சொல்லவார்கள் அல்லவா அவர்கள் அனைவருக்கும் இப்படிப்பட்ட ஒரு அமைப்பு இருப்பதால் தான் நடக்கிறது.

பாக்கியமும் களத்திரமும் சம்பந்தபடும்பொழுது திருமணம் கூட இளமையில் நடைபெறும் பாக்கியம் கிடைக்கும். எல்லாம் இருக்கும்பொழுது தான் சின்ன வயதில் திருமணம் நடக்கும். பொதுவாக இப்படி அமைவது சிறப்பான ஒரு யோகம் என்றே சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 18, 2016

தடைகள் விலகும்


ணக்கம்!
          பாக்கியஸ்தானம் எப்படி இருந்தாலும் அதாவது எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதனை நன்மை தரும் பாக்கியமாக மாற்றும் சக்தி நம்மிடம் தான் இருக்கின்றது.

பாக்கியஸ்தானத்தில் நன்மை தரும் கிரகம் இருந்தால் தான் நமக்கு நன்மை அதிகம் தரும் என்று நினைத்துக்கொண்டு இருப்போம் ஆனால் கெடுதல் கிரகங்கள் இருந்தாலும் நன்மை கிடைக்கும். 

நன்மை தரும் கிரகங்கள் இருந்தால் அப்பன் சொத்தை உட்கார்ந்துக்கொண்டு சாப்பிடும் ஆளாக இருப்பார்கள். கெடுதல் கிரகம் இருந்தால் அவர்களே உழைத்து பெரிய ஆளாக வருவார்கள். 

ஒருத்தர் சம்பாதித்த பணத்தை செலவு செய்தால் அதில் போகத்தின் அனுபவத்தை மட்டுமே காண்பார்கள். தான் உழைத்து சம்பாதிப்பவர்களுக்கு உலகத்தின் அனுபவம் கிடைக்கும். 

கெடுதல் கிரகங்கள் உள்ளவர்களை பார்த்தால் அவர்களே ஆன்மீகத்தை தேடி சென்று அனைத்திற்க்கும் வழி என்ன என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். பெரும்பாலும் ஒன்பதில் ராகு இருக்கும் நபர்களை பாருங்கள் அதிக ஆன்மீக நாட்டம் இருக்கும். அதனால் கெடுதல் கிரகங்கள் இருந்தால் நல்ல நிலைமைக்கு வரமுடியும். 

ஒவ்வொருவரும் பின்பற்றும் ஆன்மீகத்தை சார்ந்த ஒரு விசயமாகவே பாக்கியஸ்தானம் இருக்கின்றது. ஆன்மீகத்தை பின்பற்றி வாழ்வை எதிர்நோக்கும்பொழுது அனைத்து தடைகளும் நீங்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, January 16, 2016

மாட்டுப்பொங்கலும் பாக்கியஸ்தானமும்


வணக்கம்!
          இந்த பதிவை காலையிலேயே தந்து இருக்கவேண்டும் கொஞ்சம் வேலை இருந்த காரணத்தால் உங்களுக்கு தரமுடியவில்லை. இன்று மாட்டுப்பொங்கல். உங்களுக்கு வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். கிராமங்களில் மாட்டுப்பொங்கல் தான் விஷேசம்.

மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளுக்கு செய்யும் நிகழ்வு ஒருபுறம் இருந்தாலும் நமது முன்னோர்களுக்கு அவர்களுக்கு பிடித்ததை வைத்து படைப்பது தனி சிறப்பு. அவர்களுக்கு வேஷ்டி சேலை புதியதாக எடுத்து வைத்து படிப்பார்கள். அனைவரும் இதனை செய்யலாம்.

மாட்டுப்பொங்கல் அன்று முன்னோர்களுக்கு படைக்கும்பொழுது தற்பொழுது நாம் பார்த்து வரும் பாக்கியஸ்தானம் நமக்கு நல்லது செய்யும். நகரங்களில் உள்ளவர்கள் இதனை செய்வதில்லை. இதனை படித்துவிட்டாவது செய்யுங்கள். 

இன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மாலை நேரத்திற்க்குள் நல்லெண்ணெய் உடலில் தேய்த்து குளித்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சனி தந்த குரு


வணக்கம்!
          எனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு ஒன்பதாவது வீட்டில் சனிக்கிரகம் இருந்தது. அவர் சிவன் மேல் தனிஈடுபாடு கொண்டவர். அவருடைய ஈடுபாட்டால் அவர் நிறைய சந்நியாசிகளை சந்தித்தார். அவருக்கு ஒரு குரு கிடைத்தார்.

நண்பரும் நல்ல முறையில் பயின்றுவந்தார். நல்ல பொறுமையோடு அனைத்தையும் கற்றார். அவருடைய குருவும் இவருக்கு என்ன வேண்டுமோ அத்தனையும் கற்றுக்கொடுத்தார். நாம் நினைப்போம் ஒன்பதில் சனி இருந்தால் கண்டிப்பாக அவர் மிகுந்த கஷ்டப்படுவார் குரு எல்லாம் கிடைக்கமாட்டார் என்று தான் நினைப்போம்.

நண்பருக்கு குரு கிடைத்தார் ஒன்பதில் சனி இருந்த காரணத்தால் அவருடைய குரு மது அருந்துபவராக இருந்தார். மது அருந்துபவர் எப்படி ஆன்மீகம் கற்றுக்கொடுக்க முடியும் என்று நினைக்கலாம். உண்மையில் அவர் நல்ல சக்தி படைத்தவர். அவர் தான் நண்பரின் ஆன்மீகத்திற்க்கு நல்லமுறையில் உதவியவர் என்றே சொல்லலாம்.

பாக்கியஸ்தானம் கெட்டுவிடும் என்று நாம் சோதிடத்தை பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிடகூடாது. தேடுதல் இருக்கும்பொழுது கண்டிப்பாக குரு அமைவார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 15, 2016

நீங்கள் இவர்களே போல் மாறுங்கள்


ணக்கம்!
          பொங்கல் கொண்டாடத்திலும் நம் பதிவு பக்கம் வந்து ஏதாவது ஒன்றை சொல்லிருக்க மாட்டாரா என்று வரும் நண்பர்களுக்கு கண்டிப்பாக ஏதாவது சொல்லவேண்டும் என்று இந்த பதிவை தருகிறேன்.

எல்லா பகுதியிலும் கொண்டாட்டம் அதிகம் இருந்தாலும். தஞ்சாவூர் பகுதியில் உழவர்கள் அதிகம் இருப்பார்கள் கூடுதல் கொண்டாட்டம் இருக்கும். நான்கு நாட்களிலும் கொண்டாட்டம் தான். எங்கள் பகுதியில் ஜல்லிகட்டு மாதிரி விளையாட்டுகள் கிடையாது. வெறும் கொண்டாட்டம் மட்டுமே.

தமிழ்நாட்டில் எந்த ஒரு பண்டிகை கொண்டாடத்திலும் சினிமா என்ற ஒன்றை திணித்துவிடுவார்கள். சினிமா இல்லாமல் பண்டிகை கிடையாது என்பது மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கிவிடுகிறார்கள். தொலைக்காட்சியிலும் சினிமைவைப்பற்றி தான் அதிகம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். சினிமாவிற்க்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது கூடாது என்று சொல்லவருகிறேன். சினிமாவை அது சினிமா என்று தான் பார்க்கவேண்டும். அதனை கொண்டுவந்து வாழ்க்கையோடு இணைக்ககூடாது. 

தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் பல ஊர்களில் சினிமா தியேட்டர் இருந்தாலும் சினிமா அதிகம் ஓடாத ஒரு ஏரியா இருக்கின்றது. சினிமாவிற்க்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. ஒரு சினிமா பத்து நாட்கள் ஓடினாலே அது மிகப்பெரிய வெற்றியாகவே கருதப்படும். ஒரு பெரிய நடிகரின் படம் வெளியானாலும் தியேட்டரில் இருபது பேருக்கு மேல் கூட இருக்கமாட்டார்கள்.

சினிமாவிற்க்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ அதனை மட்டும் தான் கொடுப்பார்கள். அந்த பகுதியில் நிறைய பட சூட்டிங் நடைபெறும். இன்றைய தேதியிலும் நிறைய நடக்கிறது. அதனை என்ன என்று கூட கேட்கமாட்டார்கள். பெரிய நடிகர் வந்தால் கூட அவரிடம் நின்றுக்கொண்டு போட்டோ கூட எடுக்கமாட்டார்கள்.

இன்றைய தேதியில் அதிக அறிவாளிகளை கொண்ட ஒரு மாவட்டமாகவே அது இருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும். எனக்கு கேரளாவை பிடிக்கும் அதற்கு காரணம் இவ்வளவு நடிகர் இருந்தும் முதல்வராக வரமுடியவில்லை என்ற காரணத்தால் பிடிக்கிறது. அதற்கு பிறகு அறிவாளிகள் உள்ள மாவட்டமாகவே அது இருக்கின்றது என்று பிறர் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர்களை போல் உங்களின் மாவட்டத்தையும் மாற்ற உங்களுக்கு அதிக பங்குள்ளது என்பதை இந்த நேரத்தில் சொல்ல நினைக்கிறேன். எந்த மாவட்டம் என்று நீங்கள் கேட்கிறீர்களா அது தஞ்சாவூர் மாவட்டம் தான். 

சொந்த மாவட்டத்தை இப்படி தூக்கி நிறுத்தகூடாது என்று நினைக்கலாம். உண்மையை தான் சொல்லுகிறேன். நடிகரை எல்லாம் அதிகம் மதிக்கமாட்டார்கள். அப்படியே சினிமாவை பார்த்தாலும் அது சினிமா தான் என்ற மனபக்குவத்தில் பார்ப்பார்கள்.  சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று புரிந்து வைத்திருப்பார்கள். அதனால் இதனை சொல்லுகிறேன். நீங்கள் ஒரு படம் வெளியாகும்பொழுது வந்து பாருங்கள் அது எந்தளவுக்கு கொண்டாடப்படுகிறது என்பது தெரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பொங்கல் நல்வாழ்த்துக்கள்


ணக்கம்!
          தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 14, 2016

செட்டிங் ஜாதகம்


ணக்கம்!
          செட்டிங் ஜாதகம் என்று ஒன்றைச்சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். தற்பொழுது தான் அது எனக்கு ஞாபகம் வந்தது. அதனைப்பற்றி ஒருவர் கேட்டவுடன் ஞாபகம் வந்தது.

செட்டிங் ஜாதகம் என்றால் ஒருவர்க்கு வயது அதிகமாகி அவருக்கு திருமணம் நடக்கவில்லை என்றால் வயதை குறைத்து அவருக்கு ஒரு ஜாதகத்தை ஏற்பாடு செய்வார்கள். இது பல கிராமங்களில் ஏன் நகரங்களில் கூட நடக்கும் ஒரு செயல். 

அனைத்து சோதிடர்களும் இதனை செய்து தருவார்கள். நாம் ஜாதகம் எல்லாம் எழுதுவதில்லை என்ற காரணத்தால் இதனை எல்லாம் செய்வதில்லை. வயது குறைத்து எழுதப்பட்ட ஜாதகத்தை வைத்துக்கொண்டு பெண்ணை தேடுவார்கள். செட்டிங் ஜாதகத்தோடு பெண்ணின் ஜாதகத்தை பொருத்தி ஜாதகப்பொருத்தம் பார்ப்பார்கள்.

செட்டிங் ஜாதகம் போட்டு திருமணத்தை நடத்தி நன்றாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் பிறந்த ஜாதகத்தில் இவருக்கு திருமணம் செய்யும்பொழுது செட்டிங் ஜாதகம் போட்டு திருமணம் செய்யவேண்டும் என்று விதி இருக்கும். 

இதனை படித்துவிட்டு நீங்களும் இப்படி செய்யலாம் என்று செய்யாதீர்கள் எங்கோ ஒரு சில தவறுகள் நடக்கலாம். நாமும் அந்த தவறை செய்து தேவையில்லை சிக்கல்களை சந்திக்கவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பாக்கியஸ்தானம் தரும் குரு


ணக்கம்!
          பாக்கியஸ்தானத்தை வைத்து உங்களுக்கு வரும் குருவைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம் என்று சொல்லிருந்தேன். குரு சிஷ்யனைப்பற்றி இதுவரை பார்த்தோம். பாக்கியஸ்தானத்தில் நல்ல கிரகங்கள் இருந்தால் உங்களுக்கு நல்ல குரு அமைவார் என்று சொல்லலாம். தீமையான குரு இருந்தால் குரு நன்றாக அமையமாட்டார் என்று சொல்லிவிடுவார்கள்.

குருவை எல்லாம் தேடிச்செல்லும் பாக்கியம் என்பது லட்சத்திற்க்கு ஒருவருக்கு அமையலாம். நான் சொல்லுவது ஆன்மீகத்திற்க்கு அதுவும் இன்றைய காலத்தில் இதற்கு எல்லாம் நேரம் இருக்குமா என்று கேட்கலாம்.

எவ்வளவே வேலை இருந்துக்கொண்டு ஜாதககதம்பம் படிக்க வருகிறீர்கள் என்றால் சும்மா கண்டிப்பாக சோதிடம் மற்றும் ஆன்மீகத்தில் உள்ள விரும்பத்தில் தானே. எத்தனையே பல்வேறு துறை சம்பந்தப்பட்ட பதிவுகள் வரும்பொழுது இந்த துறையை தேர்ந்தெடுத்து வரும்பொழுது கண்டிப்பாக விருப்பப்பட்டு தான் வருகின்றீர்கள்.

தீமையான கிரகங்கள் பாக்கியஸ்தானத்தில் அமைந்தாலும் குரு நன்றாக அமைவார் என்ன ஒன்று என்றால் உங்களுக்கும் உங்களின் குருவுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு வந்துக்கொண்டே இருக்கும். பயின்றுக்கொண்டு இருக்கும்பொழுது இடையில் விட்டுவிட்டு வந்துவிடுவீர்கள். அது ஒன்று தான் பிரச்சினை வேறு ஒன்றும் கிடையாது.

குருவை தேடி சென்று பயிலவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு குரு அமைவார். அவரை கடைசிவரை தக்கவைத்துக்கொள்வது உங்களின் பொறுமை தானே தவிர வேறு ஒன்றும் கிடையாது.

வேதாரண்யம், கோயம்புத்தூர், திருப்பூர், பவானி போன்ற ஊர்களுக்கு செல்லவேண்டும் என்ற பயண திட்டம் இருக்கின்றது. பொங்கல் முடிந்த பிறகு இந்த ஊர்களில் உள்ள நண்பர்களை சந்திக்கவருகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, January 13, 2016

பண்டிகையில் உள்ள அர்த்தம்


வணக்கம்!
          ஒவ்வொரு இந்துக்களின் பண்டிகையும் ஏதாவது ஒரு தாந்திரியத்தோடு சம்பந்தப்பட்டு வைத்து இருப்பார்கள். நம்ம ஆட்கள் அதனை மறந்துவிட்டு வேறு ஏதாே ஒன்றை செய்துக்கொண்டு இருப்பார்கள்.

இந்துகள் பண்டிகையை அதிகம் வைத்தற்க்கு காரணம் ஏழை எளிய மக்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் முதல் எண்ணமாக இருக்கும். அதோடு ஒரு சில உள்கருத்துக்களும் இருக்கும். அதனை எல்லாம் புரிந்துக்கொண்டு நாம் பண்டிகையை கொண்டாடும்பொழுது நம் பண்டிகை நல்ல அர்த்ததோடு விளங்கும். நமக்கும் நன்மை அதிகமாக கிடைக்கும்.

உதாரணத்திற்க்கு போகிபண்டிகையை பார்த்தால் இருக்கின்ற அனைத்து பொருட்களையும் கொழுத்திவிடுகிறார்கள். தீய எண்ணத்தை கொளுத்து என்று தான் இதனை வைத்திருக்கவேண்டும். நம்ம ஆளுங்க டயரை கொழுத்திக்கொண்டு இருக்கிறார்கள். 

ஒரு வருடத்தில் சேர்ந்த பொருட்களை எல்லாம் வீட்டில் இருந்து எடுத்து போட்டுவிட்டு வீட்டை சுத்தம் செய்யும் ஒரு நிகழ்வாகவே கிராமபுறங்களில் இதனை கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு பண்டிகையிலும் உள்ள அர்த்தத்தை எடுத்துக்கொண்டு அதன்படி செயல்படும்பொழுது அனைத்து பண்டிகையும் மகிழ்வோடு இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பதிவு எழுதும் நண்பர்களுக்கு


ணக்கம்!
          நண்பர் ஒருவர் என்னை தொடர்புக்கொண்டு உங்களின் பதிவை ஒரு பிளாக்கில் எடுத்து போட்டுள்ளனர் என்று சொன்னார். அதுவும் நமது அம்மனின் போட்டோவை போட்டு பதிவிட்டுள்ளனர் என்று சொன்னார்.

நம்ம ஆளுங்க உருபடாமல் போவதே இந்த மாதிரி செயலால் தான். ஒவ்வொருவரும் தனக்கு என்ன தெரியுமோ அதனை சொன்னால் நமது மக்களுக்கு புதுவிதமான கருத்துக்கள் கிடைக்கும். உங்களால் பல பேர் நன்மை அடைவார்கள். ஒருவர் எழுதியதை எடுத்து போட்டால் அதில் என்ன கிடைக்கும்?

சோதிடமாக இருந்தாலும் சரி ஆன்மீகமாக இருந்தாலும் சரி அடிப்படை கருத்து ஒன்றாக தான் இருக்கும் ஆனால் அவர்களின் பார்வையில் அது படும்பொழுது அடிப்படையான கருத்தை தற்பொழுது உள்ள மாதிரி கொடுக்கமுடியும். எனது பார்வையில் ஒருவிதமாக படும் கருத்து உங்களின் பார்வையில் புதிய கருத்தாக வரலாம். அது எளிய மக்களை சென்றடையும்.

என்னுடைய பதிவை படியுங்கள் உங்களின் மனதில் புதியதாக கருத்து உருவானால் அதனை உங்களின் பிளாக்கில் எழுதுங்கள். உங்களுக்கு ஒரு அந்தஸ்து கிடைக்கும். அதனைவிட்டுவிட்டு என்னுடைய பதிவை அப்படியே உங்களின் பதிவில் போடும்பொழுது கண்டிப்பாக பல நண்பர்கள் படித்துவிட்டு உங்களை கீழ்தனமாக எண்ணுவார்கள்.

பல நண்பர்கள் வெளிபடையாக எழுதாமல் போனதற்க்கு காரணமே பதிவை திருடி போடுவது தான். பல நல்ல விசயம் நமக்கு கிடைக்காமல் சென்றதே இந்த மாதிரியான வேலையால் தான். பல நல்ல தகவல்கள் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது என்ற வருத்தம் எனக்கே இருக்கும்பொழுது நமது நண்பர்களின் நிலை எல்லாம் எப்படி இருக்கும்.

ஜாதககதம்பத்தில் உள்ள பதிவை எடுத்து போட்டு இருந்தால் தயவு செய்து அதனை நீக்கிவிட்டு உங்களின் பதிவை நீங்களே எழுதுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நம்ம மக்களுக்கு நாம் தான் சேவை செய்யவேண்டும். செய்வதை தடை செய்ய நினைக்காதீர்கள் பதிவு எழுதும் நண்பர்களே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

சிஷ்யன்


ணக்கம்!
          குருவைப்பற்றி பார்த்தோம் தற்பொழுது சிஷ்யன் நிலையை பார்க்கலாம். உலகத்தில் உள்ள குருக்கள் கற்றுக்கொடுத்தாலும் அதனை புரிந்துக்கொள்ளாத நிலையில் சிஷ்யன்களும் இருக்கின்றார்கள். 

சிஷ்யன்கள் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து குருவிடம் செல்லுகின்றனர். அதனை நிறைவேற்றுவதற்க்குள் குருவைப்பற்றி தவறாக பேச ஆரம்பித்துவிடுகின்றனர். ஒன்றை எதிர்பார்த்து செல்லும்பொழுது மற்றொன்று அங்கே கிடைக்கும்பொழுது எதிர்பார்த்தை விட்டுவிடுகிறார்கள்.

உலகத்தில் உள்ள குருக்களை எல்லாம் அவர்களின் சிஷ்யன்கள் தான் கொலை செய்து இருக்கிறார்கள். எந்த துறையாக இருந்தாலும் சரி அதனை எடுத்து பார்த்தால் அந்த துறையில் உள்ள அவரது சிஷ்யன்கள் கொலை செய்து இருப்பார்கள்.

சரணாகதி என்பது சிஷ்யன்களிடம் கிடையாது. தன்னை அர்பணிக்கும் குணம் இருந்தால் குரு அனைத்தையும் கொடுக்கும் விதத்தில் செயல்படுவார். பத்து நாள் அவரிடம் படித்துவிட்டு அவருகே பாடம் நடத்தும் நிலையில் சிஷ்யன்கள் ஈடுபடுவார்கள். உங்களுக்கே ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிடுவார்கள். பிறகு எங்கிருந்து குரு கற்றுக்கொடுப்பது.

நமக்கு அவசரகதி அல்லது சரணாகதி இல்லாத தன்மையால் தான் நம்மால் அடிபணிந்து படிக்கமுடிவதில்லை. எதனையும் கற்கமுடியாமல் திணறவேண்டியுள்ள நிலை ஏற்படுகிறது.

சோதிடத்தில் பாக்கியஸ்தானம் சொல்லுவதும் இதுதான் உனக்கு சரணாகதி தன்மை இருந்தால் ஒரு நல்ல குரு உனக்கு அமைந்துவிடுவார். அது இல்லை என்றால் சிக்கல் தான்.

உங்களின் பாக்கியஸ்தானம் எப்படி இருந்தாலும் உங்களின் பொறுமை தன்மை மற்றும் சரணாகதி தன்மை இருந்தால் நன்றாக அனைத்தையும் கற்றுவிடலாம். அது இல்லை என்றால் தான் பிரச்சினை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, January 12, 2016

தொழிலாளி


ணக்கம்!
          தொழிலாளியை எப்படி அமைவார் என்பதைப்பற்றி நேற்று பார்த்தோம். இன்றும் அதனைப்பற்றி பார்க்கலாம்.

ஒரு சிலரின் ஜாதகத்தில் நல்ல பாக்கியம் பெற்று அவர்களுக்கு சிறப்பான தொழில் அமைந்துவிடும். அந்த தொழில் வெற்றிக்கரமாக சென்றுக்கொண்டிருக்கும். பொதுவாக நம்ம ஆளுங்க தொழிலில் அந்தளவுக்கு திறமை எல்லாம் இருக்காது. ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலைமையில் அமைந்ததால் தொழில் நன்றாக சென்றுக்கொண்டிருக்கம். 

 முதலாளிக்கு அவர் நினைத்து பார்க்காத அளவுக்கு தொழில் அமைந்துவிட்டது என்று எண்ணி மகிழ்ச்சி கொண்டாடத்தில் இருப்பார், கொஞ்ச காலம் நன்றாக செல்லும் அதன் பிறகு அங்குள்ள தொழிலாளியால் அந்த தொழில் வீழ்ச்சி அடையசெய்யும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் தோல்வியை சந்தித்துவிடும்.

இன்றைக்கு இருக்கும் தனியார் நிறுவனங்களில் நடக்கு விசயம் இது தான். பல தனியார் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திப்பதே அவர்கள் தொழிலை கண்டுக்கொள்ளாத நிலை தானே தவிர வேறு ஒன்றும் பெரிய விசயமாக இருக்காது.

நீங்களே ஒரு பைக் வாங்கி பாருங்கள். அதற்கு ஒழுங்கான சர்வீஸ் செய்து தரமாட்டார்கள். வாங்கிய பிறகு நீ என்ன ஆனாலும் சரி என்று ஏனோ தானோ என்று இருப்பார்கள். முதலாளிக்கு இது தெரியவே தெரியாது ஆனால் அங்குள்ள தொழிலாளி முதலாளியை இப்படி பலிவாங்கிவிடுவான்.

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் நமக்கு பாக்கியம் இருந்தாலும் அதனை காப்பாற்ற தெரிந்துவைத்திருக்கவேண்டும். நமக்கு தான் தொழிலை கடவுள் கொடுத்துவிட்டாரே என்று இருந்துக்கொண்டு இருந்தால் நம்ம கதி அவ்வளவு தான். கொடுத்த பாக்கியத்தை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு


ணக்கம்!
          நேற்று குருவைப்பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவை தருகிறேன். அதாவது குருவை முதலில் நாம் பார்த்துவிடவேண்டும்.

குரு என்றவுடன் நாம் ஆன்மீகத்தை சொல்லிக்கொடுப்பவர் மட்டும் குரு என்று நினைத்துவிடுகிறோம். நமக்கு வாழ்வில் ஒவ்வொரு படியாக மேல்நோக்கி செல்வதற்க்கு சொல்லிக்கொடுக்கும் ஒவ்வொருவரும் குரு தான். ஏதாவது ஒரு வழியில் நமக்கு ஏதோ ஒரு நல்ல சேதியை கற்று தரும் வழியில் இயற்கை செயல்படுகிறது.

என்னுடைய தொடக்கபள்ளி ஆசிரியர்கள் இருவர் எனக்கு பல நன்மையான விசயத்தை சொல்லிக்கொடுத்தார்கள். அதாவது வாழ்க்கைக்கு தேவையான நீதியை சொல்லிக்கொடுத்தார்கள். அவர்கள் சொன்ன நல்ல விசயம் இன்றைய வரையிலும் இருக்கின்றது. அதன் பிறகு வந்த ஆசிரியர்களில் ஒரு சிலரை தவிர முக்கால்வாசி பேர் எதுவும் சொல்லிதரவில்லை. எதுவும் சொல்லிதரவில்லை என்பதை விட அவர்கள் என்னுடைய வாழ்விற்க்கு தேவையானதை கொடுக்கவில்லை. ஏதோ வந்தார்கள் சென்றார்கள் என்று சொல்லலாம்.

சம்பந்தம் இல்லாமல் ஏன் இதனை சொல்லுகின்றீர்கள் என்று நினைக்கலாம். நான் படித்தது பள்ளி கல்வி வரை தான் இதிலேயே எனக்கு கற்றுக்கொடுத்த விசங்கள் எனது வாழ்விற்க்கு சிறிது கூட உதவவில்லை என்று சொல்லவேண்டும். மேற்படிப்பு படித்து இருந்தால் எனக்கு இது உதவுகிறதோ இல்லையோ என்று தெரியவில்லை.

ஒரு கிராமத்தானுக்கு ஆசிரியர் என்ன சொல்லிக்கொடுத்து இருக்கவேண்டும். படிக்காத அப்பா வளர்த்த பிள்ளைக்கு குறைந்தபட்சம் குடும்பம் நடத்துவதற்க்கு தேவையான பொருளாதார தத்துவத்தையாவது சொல்லிக்கொடுத்து இருக்கவேண்டும். அதுவும் கிடைக்கவில்லை. 

இன்றைக்கு முக்கால்வாசி பள்ளிகூடங்களில் நடத்தும் ஆசிரியர்களுக்கு அவர்களுக்கு தேவையான பொருளாதாரத்தை அவர்கள் படித்த படிப்பு நிறைவுசெய்யவில்லை. அவர்கள் நடத்தி நாம் படித்தால் நாம் எப்படி பொருளாதாரத்தை நிறைவு செய்யமுடியும். இரண்டு டிகிரி படித்துவிட்டு நான்காயிரம் ரூபாய் சம்பாதித்துவிட்டு அவர்கள் பாடம் நடத்தினால் எப்படி என்னால் நிறைவான வாழ்க்கை வாழமுடியும். குருவே கஷ்டப்படும்பொழுது சிஷ்யன் நிலை எப்படி இருக்கும் என்று பார்த்துக்கொள்ளவேண்டியது தான்.

குருவாக வருபவர்களே நிறைவான வாழ்க்கையை வாழமுடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். இது அவர்களை சொல்லி குற்றமில்லை இந்த நாட்டின் நிலை அப்படி இருக்கலாம்.

ஒவ்வொரு வித கருத்துக்கும் ஒவ்வொரு குருவாக தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய நிலை தற்பொழுது இருக்கின்றது என்று சொல்லலாம். நாமும் ஒவ்வொரு குருவாக பார்த்து அவர்கள் சொன்ன கருத்தை எடுத்துக்கொள்ளவேண்டியது நமது நிலை. இந்த இயற்கையை உற்று கவனிக்கும்பொழுது அது நமக்கு நல்லதை சொல்லிக்கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றது.

தற்பொழுது சோதிடத்திற்க்கு வருகிறேன். 

நீங்கள் அனைத்தையும் கற்கவேண்டும் என்றால் அவன் பல ஜென்மங்களை எடுக்கவேண்டும். ஒவ்வொரு ஜென்மத்திலும் படிக்கும் கல்வி அவனோடு வந்துக்கொண்டே இருக்கும் என்று திருவள்ளுவரே சொல்லியுள்ளார்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

இன்றைய ஜென்மத்தில் நீங்கள் ஒரு குருவிடம் கற்கும் வித்தை பல ஜென்மங்களுக்கு அது அப்படியே இருக்கும். முழுமையாக படிப்பதற்க்கு பல ஜென்மங்கள் ஆகலாம். பாக்கியஸ்தானம் அப்படி தான் வேலை செய்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, January 11, 2016

தொழிலாளி பாக்கியம்


ணக்கம்!
          பாக்கியாதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்படும்பொழுது எப்படிப்பட்ட பாக்கியம் கிடைக்கும் என்பதை பல பதிவில் பார்த்து வருகிறோம். தொடர்ந்து இப்பதிவிலும் அதனோடு சம்பந்தப்பட்ட ஒரு சில கருத்தை பார்க்கலாம்.

நாம் ஒரு தொழில் நடத்திவந்தால் அந்த தொழில் நன்றாக நடக்கவேண்டும் என்றால் தொழிலுக்கு அமையும் தொழிலாளி நன்றாக அமையவேண்டும். நன்றாக அமையவில்லை என்றால் தொழில் நஷ்டத்தை ஏற்படுத்தும். 

பாக்கியஸ்தானம் ஒரு சிலருக்கு நன்றாக அமையும்பொழுது நமக்கு அமையும் தொழிலாளியும் நன்றாக அமைவார்கள். ஒரு சிலருக்கு பாக்கியஸ்தான அதிபதி ஆறாவது வீட்டோடு சம்பந்தம்பொழுது நல்ல தொழிலாளி அமைவார்கள்.

இன்றைய காலத்தில் கோடிக்கணக்கில் முதலீடு போட்டாலும் அங்கு வேலை செய்யும் தொழிலாளி சரியில்லை என்றால் போட்ட முதலீடு அனைத்து முடிந்தது என்று அர்த்தம் கொள்ளவேண்டியது தான். பல கம்பெனிகளை வீழ்ந்த கதை எல்லாம் தொழிலாளர் பிரச்சினையால் தான் நடந்திருக்கிறது. 

ஒரு வேலைக்காரன் நன்றாக அமைவது கூட நமக்கு கடவுள் தந்த பாக்கியம் தானே தவிர வேறு ஒன்றும் கிடையாது. பல இடங்களில் வேலைக்காரர்களால் தான் முதலாளியின் உயிருக்கே கெடுதல் விளைகிறது. 

பாக்கியம் நன்றாக இருக்கும்பொழுது உங்களுக்கு தொழிலாளிகளால் லாபம். பாக்கியம் சரியில்லை என்றால் தொழிலாளிகளால் பிரச்சினை தான். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு


க்ம்!
          ஒன்பதாவது வீடு தான் தன்னுடைய குரு யார் என்பதை காட்டும் இடம். ஒருவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் ஒவ்வாெருவரும் குருவாக இருக்கின்றார்கள். இந்த இயற்கை ஏதாவது ஒன்றைச்சொல்லிக்கொண்டே இருக்கும் மனிதனுக்கு ஏதாவது பாடத்தை கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கும். மனிதன் இருக்கும் அவசரயுகத்தில் இதனை எல்லாம் கவனிக்க தவறிவிடுகிறான் அதற்கு ஒரு குரு இருந்தால் போதும் என்று மனிதனை நாடி செல்லுகிறான் அப்படிப்பட்ட மனிதனுக்கு தன்னுடைய குரு எப்படி அமைவார் என்பதை காட்டும் இடம் ஜாதகத்தில் ஒன்பதாவது வீடு.

சோதிடத்தை கண்டுபிடித்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் பாருங்கள். ஒருவருக்கு ஒரு குரு அமைவது கூட அவரின் பாக்கியம் என்று எழுதிவைத்துவிட்டார்கள். நல்ல பாக்கியம் இருந்தால் நமக்கு நல்ல குரு கிடைப்பார்கள். பாக்கியம் இல்லை என்றால் குரு அமையமாட்டார்.

இன்றைய காலத்தில் அனைவரும் படிக்கிறார்கள் அனைவருக்கும் குரு இருந்து தான் கல்வியை கற்றுக்கொடுக்கிறார்கள். அனைவரும் டிகிரியை முடித்துவிடுகிறார்கள் அப்ப அனைவருக்கும் நல்ல குரு அமைந்திருக்கிறார் அல்லவா. அனைவருக்கும் நல்ல குருவாக அமைந்திருந்தால் அனைவருக்கும் பாக்கியமும் நல்ல அமைந்திருக்கவேண்டும். இன்றைய காலத்தில் ஒரு வகுப்பறையில் ஐம்பது பேர் படித்தார்கள் என்றால் முக்கால்வாசி பேர் உருப்படாமல் தான் போவார்கள். 

ஒரு வாத்தியார் நல்ல பாடம் நடத்தினால் கூட வகுப்பறையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் புரிந்துவிடாது. ஒவ்வொருவரின் பாக்கியஸ்தானத்தை பொறுத்து அவர்களுக்கு புரியும். ஒரு சிலருக்கு நல்ல வாத்தியாரை கண்டால் கூட பிடிக்காமல் போய்விடும். அவன் அவன் ஜாதகத்தில் உள்ள பாக்கியஸ்தானத்தின் வேலை இதுவாக இருக்கும்.

ஒரு சிலரின் மனதில் நினைக்கதோன்றும் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள் அப்பொழுது குரு நடத்தியது நன்றாக தானே இருந்திருக்கும் அனைவருக்கும் பாக்கியம் நன்றாகதானே இருந்திருக்கிறது.

நம்ம ஆளுங்க நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் ஒரு சிலர் தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர். அதாவது அவன் அவன் தானாகவே படித்து வெற்றிபெற்றவனும் இருக்கிறான். இந்த நாட்டில் ஏதோ தேர்வு நடத்துகிறார்கள் ஏதோ தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர் என்று சொல்லவேண்டிய நிலை தான் உள்ளது.

பல சோதிட அன்பர்கள் சொல்லுவது உன்னுடைய பாக்கியஸ்தானம் நன்றாக இருந்தால் உனக்கு நல்ல குரு அமைவார் என்று சொல்லுவார்கள். அதாவது தவறு முழுவதும் ஜாதகனேயே சாரும் வேறு யாரும் பொறுப்பு கிடையாது என்பார்கள். உண்மையில் நல்ல பாக்கியம் அமைந்தவர்களுக்கும் நல்ல குரு அமைவதில்லை என்பது தான் உண்மை. 

பல குருவே இன்றைய காலத்தில் நல்ல நிலையில் இல்லை என்பது தான் உண்மையாகவே இருக்கின்றது. குரு என்றால் நீங்கள் ஆன்மீகத்திற்க்கு என்று மட்டும் கருதகூடாது அனைத்திற்க்கும் வழிகாட்டுபவன் தான் குரு. ஆன்மீகம் மட்டும் கிடையாது வாழ்க்கைக்கும் வழிகாட்டுபவனாக இருக்கவேண்டும்.

ஒரு குரு என்பவன் ஒருத்தனை மிக நல்ல முறையில் வழிகாட்டுபவனாக இருக்கவேண்டும். அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சிஷ்யனுக்கு விதையாக இறங்கி ஒரு மரமாக வளரவேண்டும். விதைப்பவன் நன்றாக விளைக்கவேண்டும் அந்த விதையை வாங்கி நல்ல மரமாக மாற்றுவது சிஷ்யனின் கடமை. இரண்டு பேரையும் சாரும் ஒரு விசயமாகவே இதனை நான் கருதுகிறேன். மேலும் பல கருத்துகளை நாம் இதில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, January 10, 2016

தொழில் வெற்றி


ணக்கம்!
          நேற்று மாலை பதிவில் இறால் பண்ணையை பற்றி இட்ட கருத்திற்க்கு ஒரு சில நண்பர்கள் என்னிடம் தொடர்புக்கொண்டு பேசினார்கள். ஒருவர் அதில் நஷ்டம் ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்துக்கொண்டார்.

என்னுடைய பதிவுகள் அனைத்தும் அனுபவத்தில் எழுதும் பதிவுகள். அந்தந்த துறையில் இருப்பவர்கள் அவர்களின் துறையைப்பற்றி எழுதும்பொழுது அவர்களுக்கு இது பொருந்திவரும். இறால் பண்ணையில் சம்பாதித்வர்களும் அதிகம் உண்டு. அவர்களின் ஜாதகம் அப்படி வேலை செய்யும் கூடுதலாக அவர்களின் குலதெய்வ அருளும் அவர்களுக்கு நன்றாக இருக்கும்.

பொதுவாகவே ஒரு தொழில் செய்வதற்க்கு ஆன்மீகவாதியின் துணை தேவைப்படும். அதுவும் இப்படிப்பட்ட அதிகமான பணத்தை போட்டு அது வெற்றி பெறுவதற்க்கு ஆன்மீகவாதியின் துணை கண்டிப்பாக தேவைப்படும்.

பொதுவாகவே மனிதனுக்கு உள்ள பலகீனம் அடிப்பட்டவுடன் தான் ஞானம் பிறக்கும். நம்ம ஆட்கள் இருக்கின்ற பணத்தை எல்லாம் விட்டுவிட்டு அதன் பிறகு தான் ஆன்மீகவாதியை தேடி அலைவார்கள். நீங்கள் அப்படி எல்லாம் இருக்காமல் எந்த தொழில் செய்தாலும் ஒரு ஆன்மீகவாதியிடம் ஆலோசனை கேட்டுவிட்டு பிறகு அந்த தொழிலை செய்யுங்கள். 

ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பார்க்கும்பொழுது தான் ஒரு சில சூட்சமவிசயங்கள் எல்லாம் தெரியவரும். ஜாதகத்தை பார்த்து நாம் தொழிலை தேர்ந்தெடுத்துக்கொண்டு ஆன்மீகபலம் கொண்டு செயல்படும்பொழுது கண்டிப்பாக வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பாக்கியஸ்தானம் சொல்லும் கருத்து


ணக்கம்!
          ஒவ்வொருவருக்கும் ஒரு பெரிய பாடமாக அவர்களின் கஷ்டகாலம் இருக்கும். ஒவ்வொரு கஷ்டத்திலும் ஏதோ ஒன்றை கடவுள் புரிய வைக்க இதனை செய்து இருக்கிறார் என்பது புரியும்.

இன்றைக்கு இருக்கும் மக்கள் அவர்களின் உறவினர்களிடம் நான் இப்படி வாழ்கிறேன் அப்படி வாழ்கிறேன் என்று தன்னுடைய வீணான பகட்டு தன்மையை வெளிப்படுத்தி காட்டிக்கொண்டு இருப்பார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு மேலை வந்தவர்கள் கூட தன்னுடைய கஷ்ட காலத்தை மறந்துவிட்டு பேசுபவர்களாக இருக்கின்றார்கள்.

ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய பாடமாக தன்னுடைய கஷ்டகாலம் இருக்கும் என்பதை சொல்லிருக்கிறேன். இதனை நீங்கள் உங்களை சந்திப்பவர்களிடம் உங்களிடம் உண்மையாக இருப்பவர்களிடம் சொன்னீர்கள் என்றால் உங்களை அறியாமையிலேயே உங்களுக்கு ஏற்படும் தலைகணத்தை குறைப்பதற்க்கு இவர்கள் உதவுவார்கள்.

தங்களுடைய பகட்டை தேவைப்படும்பொழுது மட்டுமே வெளியில் காட்டவேண்டும் ஏன் என்றால் ஒரு சில இடத்தில் இப்படிப்பட்ட பந்தா எடுபடுகிறது. தேவையில்லாத இடத்தில் தயவு செய்து காட்டிவிடாதீர்கள்.

பாக்கியஸ்தானத்தை தற்பொழுது பார்த்துக்கொண்டு வருகிறோம் அதிலும் சொல்லுகின்ற ஒரு கருத்து நீ அமைதியாக இருந்தால் உனக்கு எல்லாம் கிடைத்துவிடும் என்பது தான் அது. நல்லது நடந்தாலும் கெடுதல் நடந்தாலும் பொறுமையாக இருப்பவர்களுக்கு பாக்கியஸ்தானம் என்றும் கைவிடுவதில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, January 9, 2016

அனுபவம்


ணக்கம்!
          சோதிடத்தை நம்பாதவர்கள் கூட அமாவாசை மற்றும் பெளர்ணமியை பார்த்து பயப்படதான் செய்வார்கள். அறிவியல் வளர்வதற்க்கு முன்பே இதனை எல்லாம் கண்டிபிடித்து சொன்ன நம்ம ஆட்கள் எவ்வளவு பெரிய ஆள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரு நாத்திகனாக இருந்தால் கூட ஆன்மீகத்தை நம்புகிற ஒரு விசயத்தை சொல்லுகிறேன்.

எங்கள் ஊரில் இருந்து கடல் பகுதி மிக குறைந்த தூரத்தில் தான் இருக்கின்றது. இருபது கிலோ மீட்டர் தூரத்தில் கடல் பகுதியை அடைந்துவிடலாம். இந்த கடல் பகுதி ஓரத்தில் இறால் பண்ணை அமைத்து இறாலை வளர்க்கிறார்கள். 

இறால் பண்ணை தொழில் என்பது உங்களுக்கு எப்படி ஷேர் மார்க்கெட் ஒரு லாபம் கொடுக்கும் தொழில் என்று நம்புகிறீர்களோ அதேப்போல் இறால் பண்ணையும் ஷேர் மார்க்கெட் மாதிரியான ஒரு தொழில்.

ஷேர்மார்க்கெட்டில் பணத்தை போட்டு லாபம் சம்பாதித்தவர்களும் இருக்கின்றார்கள் அதேப்போல் நஷ்டம் ஏற்பட்டவர்களுக்கும் அதிகம் பேர். நல்ல நேரம் இருந்தால் அரசனைப்போல் மாறுவார்கள் கெட்ட நேரம் இருந்தால் ஆண்டியாக போய்விடுவார்கள்.

இறால் பண்ணை வளர்ப்பவர்களுக்கு தான் தெரியும் இந்த திதி எல்லாம் எப்படி வேலை செய்யும் என்பது. இறால் பண்ணை வளர்ப்பவர்களின் விதியை முடிவு பண்ணுவது இந்த திதி தான். 

பதினைந்து லட்சம் ரூபாய் போட்டால் 120 நாட்களில் ஐம்பது லட்சம் ரூபாய் லாபத்தை பார்க்கும் ஒரே தொழில் இந்த இறால் பண்ணை மட்டுமே. எனக்கு தெரிந்து அதிக பணம் பார்க்கும் தொழில் இதுவாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இறால் பண்ணை ஆரம்பித்து இந்த 120 நாட்களில் வருகின்ற அஷ்டமி அமாவாசை திதியை தாண்டி வந்துவிட்டால் அவரை கையில் பிடிக்கமுடியாது. அஷ்டமி திதி அதிபயங்கரமான ஒரு திதியாகவே இவர்கள் கருதுவார்கள்.

இறால் மீன் ஒன்றுக்கு ஒரு நோய் வந்துவிட்டால் அவ்வளவு தான் குளத்தில் இருக்கும் அனைத்து மீனும் இறந்துவிடும். இந்த மீனுக்கு நோய் வராமல் தடுக்க அஷ்டமி திதி இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்து மருந்து போட ஆரம்பித்துவிடுவார்கள். அஷ்டமியை தாண்டிவிட்டால் ஆபத்து இல்லை என்று சொல்லுவார்கள். சாமி கும்பிடாதவனும் இறால் பண்ணை அமைத்தால் அவன் படு பக்திமானாக மாறிவிடுவான்.

உங்களுக்கு இந்த தொழிலை பற்றி தெரிந்து இருந்தால் நான் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை என்பது தெரியும். கோடிக்கணக்கில் விட்டு தெருவிற்க்கு வந்தவர்களும் அதிகம். கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்களும் இங்கு அதிகம் பேர் இருக்கின்றார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இராகு கேது பெயர்ச்சி அச்சம்


ணக்கம்!
          நேற்று நடந்த ராகு கேது பெயர்ச்சி தான் உலகம் முழுவதும் ஓடும் பெரிய ஒரு செய்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன். பட்டி தொட்டி எல்லாம் பரவலாக பேசப்படும் ஒரு செய்தியாக்கிய மாற்றிய சாதனை சோதிடர்களுக்கு சேரும் என்று நினைக்கிறேன்.

கோச்சாரப்பலன் எல்லாம் அனைவருக்கும் வேலை செய்துவிட்டால் நம்ம மக்களுக்கு கஷ்டம் என்பதே வராது. கெடுதல் பலனை தரும் காலத்தில் கெடுதல் பலனை கொடுத்தாலும் நல்ல நேரத்தில் கொடுத்த பலனை வைத்து நம்ம மக்கள் விடாமல் பிடித்துக்கொள்வார்கள்.

கோச்சாரப்பலன் ஒரு ஜாதகத்தில் ஐந்து சதவீத பலனை தந்தாலே பெரிய புண்ணியம் செய்தவனாக தான் இருக்கவேண்டும். நம்ம மக்களை பயமுறுத்தி வைத்திருப்பதில் சோதிடர்களுக்கு அலாதியான ஒரு விருப்பம் என்று நினைக்கிறேன்.

உங்களின் ராசியை நீங்கள் சோதனை செய்து பார்த்தாலே தெரியும். பல நல்ல நிலையில் உங்களின் ராசி இருக்கின்றது என்று புத்தகத்தில் போட்ட காலத்தில் எல்லாம் நீங்கள் வெளியில் சொல்லமுடியாத துயரத்தில் இருந்து இருப்பீர்கள்.

கோச்சாரப்பலனை பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை சும்மா ஒரு முறை பார்த்தால் போதும் அதன் பிறகு உங்களின் ஜாதகத்தில் உள்ள தசாநாதன் எப்படி வேலை செய்கிறது என்பதை பாருங்கள். தசாநாதன் கொடுக்காததை வேறு யாரும் அவ்வளவு எளிதில் கொடுத்தவிடமுடியாது. பயப்படாமல் உங்களின் ஜாதகத்தை பார்த்து பலனை தெரிந்துக்கொண்டு அதன்படி நடந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, January 8, 2016

அனுமன் ஜெயந்தி


ணக்கம்!
          நாளை அனுமன் ஜெயந்தி. சிவ சொருபமான அனுமனை வணங்கவேண்டிய நாள். பல நண்பர்களுக்கு அனுமனுக்கு வெண்ணைக்காப்பை செய்ய சொல்லிருப்பேன். பல நண்பர்கள் இதனை செய்திருக்கிறார்கள்.

இராவணன் கிரகங்களை எல்லாம் கட்டி வைத்து இராமனுக்கு மரணயோகத்தை தருவதற்க்கு ஏற்பாடு செய்யும்பொழுது அனுமன் தான் அத்தனை கிரகங்களையும் அவிழ்த்து விடுவான். அதனால் அனுமனை வணங்கினால் கிரகங்களின் தாக்கம் இருக்காது.

அனுமனுக்கு பல இடங்களில் சிமெண்ட் சிலை வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட சிலைகளை வணங்க வேண்டாம். நம்ம ஆளுங்க உயரமாக இருக்கவேண்டும் என்று சிமெண்ட்சிலையை வைத்து அவர்களின் பெயரை பறைசாற்றுவார்கள். இதில் எல்லாம் அந்தளவுக்கு சக்தி இருக்காது. சக்தி சிமெண்டில் என்றும் தங்காது.

சின்ன சிலையாக இருந்தாலும் கரும்கற்களால் செய்யப்பட்ட அனுமனை வணங்குங்கள். உங்களுக்கு அனைத்து பாக்கியத்தையும் கொடுக்கும்.நாளை முழுவதும் அனுமன் நினைப்பில் இருந்தால் போதும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

பாக்கியஸ்தானம் எதிரிஸ்தானம்


ணக்கம்!
ஒன்பதாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் இருந்தால் ஜாதகனுக்கு அடிக்கடி நோய் வந்துவிடும். ஒரு சிலருக்கு தந்தை நோய்வாய்ப்பட்டு இருப்பார். ஒரு சிலருக்கு அடிக்கடி கடன் ஏற்பட்டு அதனால் பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கும். தந்தையின் உறவினர்களிடமே கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

தந்தையின் உறவுகள் பிரச்சினையை ஏற்படுத்திக்கொண்டு இருப்பார்கள். சம்பந்தமே இல்லாம் சண்டை போடுபவர்களாக இருப்பார்கள். உலகம் முழுவதும் இப்படிப்பட்ட அமைப்பு தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவருக்கும் தந்தையின் உறவு கைகொடுப்பதில்லை என்று நினைக்கிறேன்.

பொதுவாக இந்த அமைப்பு சரியில்லை என்றாலும் ஒரு சிலருக்கு நன்மையளிப்பதாகவே இருக்கின்றது. ஒரு சிலருக்கு மேலே சொன்ன விசயத்திற்க்கு எதிராகவே நடக்கிறது. இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்களாக இருந்தால் இப்படி நடக்கலாம். ஒரு சிலருக்கு தீயகிரகங்களாக இருந்தால் கூட நல்லது செய்கிறது. அவர்களின் ஜாதகத்தை பொறுத்து அமையும்.

பாக்கியஸ்தான அதிபதி ஆறாவது வீட்டில் அமரும்பொழுது ஒரு சிலருக்கு தன்னுடைய எதிரியால் கூட நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. எதிரியினால் இவர்கள் வாழ்பவர்களாகவும் இருக்கின்றார்கள். ஒரு சிலருக்கு இப்படி அமைகிறது.

உங்களுக்கு இப்படி அமைந்தால் உங்களின் ஜாதகத்தை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். ஏதாவது நோய் வந்து தொல்லைப்படுத்தினாலும் படுத்தும். அதனால் அதற்கு பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள்.வருமுன் காப்பாற்றக்கொள்ளலாம் அல்லவா அதனால் சொன்னேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, January 7, 2016

பித்ருதோஷ பரிகாரம்


ணக்கம்!
          பாக்கியஸ்தானம் கெடுகிறது என்றால் முற்பிறவியில் நாம் ஏதோ பெரிய அளவில் தவறு செய்து இருக்கிறோம் என்பதை காட்டுகிறது. இந்த பிறவியில் அதற்கு பரிகாரம் தேடிக்கொள்ள வழி வகுக்கும்.

பித்ரு தோஷம் இருப்பவர்களுக்கு அதிகப்பட்சமாக முற்பிறவியில் கொலை போன்ற பாதங்களில் ஈடுபட்டு இருந்தால் இப்பிறவியில் பித்ருதோஷமாக வருகிறது என்று சொல்லுவார்கள். பித்ருதோஷம் இருப்பவர்களின் நிலையை பார்த்தாலும் அப்படி தான் இருப்பார்கள்.

பித்ருதோஷம் இருப்பவர்களுக்கு ஏற்படும் தடையும் சொல்லி மாளாது. இவர்கள் அனைவரும் செய்யவேண்டியது பரிகாரம் என்பதை விட அவர்களே சென்று இதற்கு பரிகாரம் தேடிக்கொள்ளவேண்டும்.

புண்ணிய ஷேத்திரம் என்று சொல்லப்படுகின்ற இடங்களுக்கு சென்று புனித நீராடிவிட்டு அங்குள்ள இறைவனை தரிசனம் செய்துவிட்டு வந்தாலே போதும் இப்படிப்பட்ட பாதிப்பில் இருந்து விடுப்பட்டு வெளியில் வரலாம்.

குலதெய்வ வழிபாட்டையும் செய்து வரவேண்டும். குலதெய்வ வழிபாட்டிற்க்கு பச்சைப்பரப்புதலை செய்ய சொல்லிருந்தேன். அதனை நீங்கள் செய்து வந்தால் ஒரு நிம்மதியான வாழ்வு உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு