Followers

Monday, October 16, 2017

தொழில் மற்றும் வேலை மாற்றம்


வணக்கம்!
          ஒரு துறையை விட்டு நீங்கள் அடுத்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது எந்தளவுக்கு சாத்தியபடும் என்பது சொல்லிவிடமுடியாது. அதனால் ஒரு துறையை தேர்ந்தெடுக்கும்பொழுது அதனைப்பற்றி நன்கு யோசித்துவிட்டு செய்வது நல்லது.

இன்று வரை ஒரு துறையை சம்பந்தப்பட்ட வேலையில் நீங்கள் இருந்தால் அதனை விட்டு வேறு ஒரு துறைக்கு நீங்கள் மாறினால் அதில் யோசித்து செயல்படவேண்டும். இதுவரை நீங்கள் அந்த துறையில் நிறைய காலத்தையும் நிறைய உழைப்பையும் போட்டு இருப்பீர்கள். அதனை விட்டு செல்லும்பொழுது அது வீணாக சென்றுவிடகூடாது.

தொழில் செய்பவர்களும் இப்படி தான் சிந்திக்க வேண்டும். ஒரு துறையை விட்டுவிட்டு அடுத்த துறைக்கு சென்றால் அடுத்த துறைக்கு செல்லும்பொழுது இருந்த துறையில் வேலை பார்த்த அனைத்தும் வீணாக சென்றுவிடகூடாது. அதனை எந்தளவுக்கு மாற்றினால் நல்லது என்பதை யாேசித்துவிட்டு அதன் பிறகு மாறுங்கள்.

சோதிடபடி தசா மாறினாலும் ஏற்கனவே இருந்த தொழிலுக்கு தகுந்தமாதிரி தான் செயல்படவேண்டும். அதனை விட்டுவிட்டு தொழிலை மாற்றினால் நிறைய சிக்கல் மற்றும் தோல்வியை சந்திக்க நேரிடும்.

ஒரு வேலைக்கு செல்வதாக இருந்தாலும் இதனை கருத்தில் கொண்டு  செயல்படுங்கள். ஒரு அமைப்பை உருவாக்குவது என்பது பெரிய பாக்கியம். அந்த அமைப்பை கலைத்தால் அதுபோல மறுமுறை உருவாக்கமுடியாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Sir, Vaazhkayil munneriya palarum , Aaramba kaalathil yethavathu oru Velai seithirupar. Grahathin matrathaal, Veru Thuraiku Maruvar. Athan Piragu avar Periya Alavil vanthu vidukirargal. Example, "Rajnikanth, Conductor to Super Star", "OPS Tea Shop - CM", "MGR Actor - CM", Ithai patri thangal Karuthu?