Followers

Wednesday, October 4, 2017

பச்சைப்பரப்புதல்


வணக்கம்!
          நேற்று அம்மனுக்கு பச்சைப்பரப்புதல் செய்தேன். பச்சைப்பரப்புதலைப்பற்றி அடிக்கடி நமது ஜாதககதம்பத்தில் சொல்லிவருகிறேன். நமது நண்பர்களும் தொடர்ந்து அதனை அவர் அவர்களின் வீட்டில் செய்து வருகின்றார்கள்.

பச்சைப்பரப்புதலைப்பற்றி உங்களின் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி இதனை செய்ய சொல்லுங்கள். பச்சைப்பரப்புதலை தொடர்ந்து ஒருவர் செய்து வந்தாலே போதும் மிக குறைந்த காலத்தில் அவர்கள் ஒரு நல்ல வளர்ச்சியை கண்டுவிடமுடியும்.

பச்சைப்பரப்புதலை செய்வதால் நம்மீது பிறர் வைக்கும் கண்கள் கூட விலகி சென்றுவிடும். அதாவது பொறாமையால் நமக்கு தெரியாமல் நம்மீது நமக்கு பக்கத்தில் உள்ளவர்கள் தீய விளைவுகளை ஏற்படுத்திவிடுவார்கள்.

பொறாமை என்பது கிராமத்தில் மட்டும் இல்லை. நகரத்திலும் இருக்கின்றது. ஏன் அமெரிக்காவில் கூட நிறைய பொறாமை பிடித்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்களின் பார்வையில் இருந்து நாம் தப்பிக்க பச்சைப்பரப்புதலை செய்து வரவேண்டும்.

பச்சைப்பரப்புதலை தொடர்ந்து செய்து வரும்பொழுது உங்களின் வளர்ச்சி மற்றும் பொறாமை நீங்கி நீங்கள் வளர்ந்துவிடலாம் என்பதால் செய்ய சொல்லுகிறேன். பச்சைப்பரப்புதலைப்பற்றி தெரியாதவர்கள் ஜாதககதம்பத்தில் தேடிப்பாருங்கள் தகவல்கள் நிறைய கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Unknown said...

Dear Rajesh Ji,

Pachaiparapputhal pournami natkalil mattum thaan seyya venduma?
Veru endha endha natkalil ellam seyyalam endru thelivu paduthungal please.

Thanks,
Sivakumar TR