Followers

Saturday, October 14, 2017

பண்டிகையும் சுக்கிரனும்


ணக்கம்!
          தீபாவளி கூட சுக்கிரனின் காரத்துவத்தில் தான் அதிகம் வரும். புதிய துணி இனிப்பு வகைகள் மற்றும் சந்தோஷ மனநிலையில் இருப்பது எல்லாம் சுக்கிரனின் காரத்துவத்தில் தான் வரும்.

தீபாவளி பண்டிகையை சந்தோஷத்தில் கொண்டாடினால் கூட சுக்கிரனின் காரத்துவத்தை அதிகம் பெற்று வாழ்வில் சிறக்கலாம். அதோடு புது துணிகளை வாங்கி பிறர்க்கு கொடுக்க சொல்லிருந்தேன். அனைவரும் இதனை செய்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நாட்டில் சந்தோஷ மனநிலை உருவாகினால் அது சுக்கிரனின் காரத்துவத்தில் வரும். நாட்டில் சந்தோஷம் உருவாகின்ற ஒரு கிரகம் என்றால் அது சுக்கிரன் மட்டும் தான். ஏதாவது ஒரு பண்டிகையை உருவாக்கி சந்தோஷத்தை கொடுக்கிறது.

பெரும்பாலும் மக்கள் சந்தோஷ நேரத்தில் தான் கோவிலை நாடி செல்கின்றனர். சுக்கிரனின் வழிபாட்டிற்க்கும் காரத்துவத்தை தருகிறார். அனைத்து வழிபாட்டை செய்ய மக்களை தூண்டுவதும் சுக்கிரன் கிரகம்.

நீங்கள் ஒரு பண்டிகையை மகிழ்வோடு கொண்டாடினாலே அது சுக்கிரனின் காரத்துவத்தை உருவாக்கி கொள்கிறீர்கள் என்று தான்  அர்த்தம். சந்தோஷமாக பண்டிகையை கொண்டாடுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Chandru said...

அருமை அருமை

rajeshsubbu said...

/* Chandru said...
அருமை அருமை */
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி