Followers

Wednesday, November 1, 2017

சுக்கிரன்


ணக்கம்!
         கடவுளுக்கு செய்யப்படும் ஹோமத்தில் நாம் பயன்படுத்துவது நெய். ஒரு ஹோமம் செய்வதற்க்கு நெய் தான் முக்கியமான அடிப்படை பொருள். இது இல்லாமல் ஹோமம் இல்லை.

நெய்யை அக்னியில் இடும்பொழுது தான் அதன் வழியாக நாம் வைக்கப்படும் கோரிக்கை இறைவனுக்கு சேர்க்கப்படுகிறது. ஹோமத்தில் நெய்யை முதன்மைப்படுத்துகிறார்கள் என்றால் நெய்க்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள்.

நெய்க்கு காரத்துவம் வகிப்பவர் சுக்கிரன். சுக்கிரனின் பொருளை கடவுளுக்கு செய்யப்படும் ஹோமத்தில் பயன்படுத்திருக்கிறார்கள் என்றால் எந்தளவுக்கு சுக்கிரன் முக்கியத்துவம் ஆகிறார் என்று பாருங்கள்.

நெய் சுக்கிரனின் காரத்துவத்தில் வருகின்றது என்று சொன்னால் யாரும் அதனை அவ்வளவு எளிதில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நெய் குருவிற்க்கு தான் காரத்துவம் வருகின்றது என்பார்கள். நெய் சுக்கிரனின் காரத்துவத்தில் தான் அதிகம் வருகின்றது.

நெய் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கும் அது நன்மை தான் செய்யும். நல்ல சக்தி மிகுந்த உடலாகவும் மாறும். சுக்கிரனின் காரத்துவத்தை அதிகரிக்க நெய்யையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Cold Problem irukiravargal enna panna Sir.. Ghee Agathey..