Followers

Saturday, October 10, 2015

சனிப்பிரதோஷம்


வணக்கம்!
          இன்று சனிப்பிரதோஷம் மாலை நேரத்தில் சிவவழிபாடு செய்யவேண்டிய நாள். எந்த பிரதோஷத்தையும் விட சனிபிரதோஷத்திற்க்கு அதிக சக்தி உண்டு என்று பரப்பபட்டுள்ளது. இதுவரை பிரதோஷத்தில் பங்குக்கொள்ளாத நபர்கள் இன்று பங்குக்கொள்ளலாம்.

ஒரு சிலர் வீட்டில் நடராஜர்க்கு அபிஷேகம் செய்வார்கள் அவர்களும் இன்று செய்யலாம். வீட்டில் பூஜை செய்யமுடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவலாயம் சென்று பிரதோஷத்திற்க்கு தேவையான அபிஷேகப்பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம்.

நம்மால் பிரதோஷ பூஜைக்கு செல்லமுடியவில்லை என்ற நிலை ஏற்படும்பொழுது மாலை வேளையில் சிவனை நினைத்துக்கொண்டு இருக்கலாம். இடைவிடாத சிவன் நினைப்பு உங்களை உயர்த்தும்.


சிவன் கோவிலை சுற்றி வலம் வரலாம். கிரிவலம் போல் சுற்றி வரலாம். சந்திரன் பாதிக்கப்பட்டு இருக்கும் ஜாதகர்கள் மாலை வேளையில் இன்று சிவன் கோவிலை சுற்றி வாருங்கள் நல்ல மனநிலை உங்களுக்கு உருவாகும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: