Followers

Tuesday, October 27, 2015

பாக்கியஸ்தானம்


வணக்கம்!
          பாக்கியஸ்தானம் எந்தளவுக்கு பயன்படுகிறது என்பதை நான் என்னுடைய அனுபவத்தில் பலருக்கு பார்த்து இருக்கிறேன். தொழில் செய்பவர்கள் வரும்பொழுது அவர்களுக்கு நிறைய பரிகாரம் செய்வது உண்டு. பரிகாரம் செய்யும் நேரத்தில் பூர்வபுண்ணிய வீடும் பாக்கியஸ்தானமும் தான் அதிகம் எங்களுக்கு தேவைப்படும்.

முன் செய்த புண்ணியம் எல்லாம் எந்த ஜென்மத்தில் வருகின்றது என்பது தெரியாது. இந்த ஜென்மத்திலேயே அனைத்தும் வந்துவிடாது. ஒருவர் ஆசைப்பட்டு எனக்கு இப்படி வேண்டும் அல்லது இப்படிப்பட்ட வாழ்க்கை அமையவேண்டும் என்று கேட்கும்பொழுது அவர்களின் பூர்வபுண்ணிய கணக்கில் என்ன இருக்கின்றது என்பதை பார்த்து அதில் இருந்து தான் எடுத்து இந்த வாழ்க்கைக்கு சரி செய்வோம்.

சூட்சம வேலை தான் இது எல்லாம். எந்த வேலையாக இருந்தாலும் அது ஜாதகத்தை வைத்து செய்யப்படும்பொழுது நல்ல நிரந்தர தீர்வாக அமையும். பாக்கியஸ்தானம் மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஜாதகத்தை வைத்து பாக்கியஸ்தானம் கொடுப்பது போல் செய்வது தான் அதிகம் நடக்கும்.

ஒருவர் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார் என்றால் அவர் முன்ஜென்மத்தில் பாவம் மட்டும் தான் செய்துக்கொண்டிருப்பார் என்பது இல்லை. முன்ஜென்மத்தில் நல்லதும் செய்து இருப்பார். இந்த ஜென்மத்திற்க்கு ஏதாவது ஒரு காரணத்திற்க்காக வராமல் இருக்கும். அதற்கு நாம் வழி செய்துவிட்டால் மிக உயர்ந்த வாழ்க்கையை வாழமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: