Followers

Saturday, October 3, 2015

அனுபவம்


வணக்கம்!
          ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு விதமான புதுமையான அனுபவம் எனக்கு கிடைக்கும். இந்த முறையும் அது நடந்தது. பல வருடங்கள் நமது ஜாதககதம்பத்தை பின்பற்றும் நண்பர்கள் எல்லாம் இதுவரை சந்திக்காமல் இருந்து இருக்கின்றனர். தற்பொழுது எல்லாம் ஒவ்வொருவராக வந்து சந்திக்கிறார்கள்.

நான் செல்லும் ஊர்கள் அனைத்தையும் முன்கூட்டியே பதிவில் சொல்லிவிடுகிறேன். அந்த நாளில் என்னை வந்து சந்திக்கவேண்டும் என்பதற்க்காக தான் முன்கூட்டியே பதிவில் போடுகிறேன். முடிந்தவரை ஜாதககதம்பத்தை படிப்பவர்களை சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. உங்களின் ஊர்க்கு வரும்பொழுது சிரமம் பார்க்காமல் வந்து சந்தித்துவிடுங்கள்.

ஒவ்வொரு ஊர்க்கும் செல்லும்பொழுது சந்திக்கும் நண்பர்களிடம் புதிய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்வது வழக்கம். ஜாதககதம்பத்தில் சொல்லாத கருத்துக்களை நேரில் சந்திக்கும்பொழுது உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

பொதுவான இடத்தில் எழுதும்பொழுது ஒரு சில கருத்துக்களில் பிடிவாதமாக இருப்பதுபோல் உங்களுக்கு தோன்றும் அது என்னை சந்திக்கும்பொழுது அப்படி இல்லை என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

அம்மன் பூஜை முடிந்த பிறகு மதுரை மற்றும் அருப்புக்கோட்டை செல்லவதாக திட்டம் இருக்கின்றது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: