Followers

Tuesday, October 13, 2015

பாக்கியஸ்தானத்தில் பாக்கி


க்கம்!
          என்னிடம் சோதிடம் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவரின் பையனுக்கு திருமணம் நடைபெறவில்லை அதற்கு காரணம் தெரியவில்லை என்று சொன்னார். நான் அவரின் பையனின் ஜாதகத்தை பார்த்துவிட்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன்.

நான் கடை வைத்திருக்கிறேன் சார் என்று சொன்னார். அந்த கடை எங்கு உள்ளது என்று கேட்டேன். அவரின் கடை ஒரு கோவில் நிலத்தில் உள்ளது என்றார்.

நாம் தொடர்ந்து சோதிடம் பார்த்து வந்தால் நமக்குள்ளே வந்தவரின் பிரச்சினை என்ன என்று தெரிந்துவிடும். அதாவது நம்மை அறியாமலேயே என்ன என்று புரிந்துவிடும். இது எல்லா சோதிடர்களுக்கும் கொஞ்ச நாளில் உள்ளுணர்வில் ஏற்படுகின்ற ஒன்று.

அவர் கடை கட்டியிருந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடையை வைத்துக்கொண்டு கோவிலுக்கு வரி செலுத்தாமல் இருந்திருக்கிறார் அந்த காரணத்தால் அவரின் பையனுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போனது. உடனே அவரிடம் கோவிலுக்கு உள்ள வரியை செலுத்திவிடுங்கள் திருமணம் நடைபெறும் என்று சொன்னேன்.

பையனின் ஜாதகத்தில் ஒன்பதாவது வீட்டில் ராகுவும் செவ்வாயும் சேர்ந்து இருந்தது. செவ்வாய் நிலத்திற்க்கு காரணம் வகிக்கிறார் ராகு ஏமாற்றுதலுக்கு காரணம் வகிக்கிறார். இதனை கண்டறிந்து சொன்னவற்றில் உண்மை இருந்தது.

இன்றைய காலத்தில் கோவிலுக்கு உள்ள கடைகளில் அதிகம் பேர் வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கின்றனர். பொதுவாக நாம் முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் ஆன்மீகம் சம்பந்தமாக உள்ள விசயங்களில் பாக்கி வைத்திருக்ககூடாது. ஒரு சிலர் கோவிலுக்கு மொட்டை அடிக்கிறேன் என்று வேண்டிருப்பார்கள் அதனை கூட நாம் பாக்கி வைக்ககூடாது. நல்ல வாழ்க்கையை ஆண்டவன் கொடுக்கிறான் நம்முடைய குறுகிய புத்தியால் அதனை சீரழிக்கிறோம்.

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதி நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள். உங்களை விரைவில் சந்திக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: