Followers

Wednesday, October 14, 2015

பரிகாரம்


ணக்கம்!
          பல நண்பர்கள் புத்தகங்களை படித்துவிட்டு ஏதாவது ஒரு தோஷம் இருக்கின்றது என்று அவர்களே கிரகங்களுக்கு சென்று பரிகாரம் செய்துக்கொண்டு இருக்கின்றனர். 

புத்தகங்களில் உள்ள தோஷம் எல்லாம் வேலை செய்வது கிடையாது. அனுபவத்தில் பல தோஷங்கள் வேலை செய்யாமல் இருப்பதை பார்த்து இருக்கிறேன். ஒரு பிரச்சினை வந்தவுடன் இது தான் பிரச்சினையாக இருக்குமோ என்று பரிகாரங்களை அவர்களே செய்துக்கொண்டு இருக்கின்றனர்.

முதலில் ஜாதகத்தில் உள்ள தோஷத்திற்க்கு சம்பந்தப்பட்ட கிரகத்திற்க்கு இவர்கள் பரிகாரம் செய்கின்றனர். பரிகாரம் செய்வது தவறு இல்லை ஆனால் எல்லாவற்றுக்கும் கிரகத்தையே பிடித்துக்கொண்டு இருப்பது நல்லதல்ல.அதே நேரத்தில் கிரகங்களுக்கு பரிகாரம் செய்தவுடன் உடனே நமக்கு நல்லதை தரும் என்பதும் சந்தேகமே. கிரகங்களுக்கு உள்ள தேவதைக்கு பரிகாரம் செய்தால் ஒரளவு பலன் கிடைக்கும்.

முதலில் பிரச்சினை எதில் இருந்து வருகிறது என்பதை முடிவு செய்துவிட்டு அதன் பிறகு அதற்கு என்ன செய்யலாம் என்பதை யோசித்துவிட்டு செய்வது நல்லது.

உதாரணமாக பலருக்கு கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்படும் அதனை பேசி தீர்த்துவிட்டு அதன் பிறகு ஏதாவது ஒரு கிரகம் பிரச்சினையை தரும் அதற்கு பரிகாரம் செய்யலாம். பல பிரச்சினைகளுக்கு இப்படி தான் தீர்வு காணவேண்டும் அதன் பிறகு பரிகாரம் செய்துக்கொள்ளலாம்.

இன்று மதியம் கோவை பயணம். நாளை திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


No comments: