Followers

Wednesday, October 28, 2015

பாக்கியஸ்தானத்தை பலப்படுத்த


வணக்கம்!
          பாக்கியஸ்தானத்தில் சொல்லப்படும் கருத்துக்கள் பொதுவாகவே ஆன்மீக சம்பந்தப்பட்ட காரியங்களாக இருக்கும். ஆன்மீகசம்பந்தப்பட்ட காரியங்கள் எதனை வேண்டுமானாலும் நீங்கள் செய்து பாக்கியஸ்தானத்தை பலப்படுத்திக்கொள்ளலாம்.

என்னிடம் வந்து தான் இதற்கு தீர்வு காணவேண்டும் என்பதில்லை என்னிடம் வந்தால் பணம் கேட்பேன். உங்களால் முடிந்தளவு ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு இந்த வீட்டை பலப்படுத்திக்கொள்ளமுடியும் என்று பல பதிவுகளில் சொல்லிவருகிறேன். ஆன்மீகத்தில் ஒவ்வாெருவருக்கும் ஒவ்வொரு மார்க்கம் இருக்கும் அந்த மார்க்கத்தில் கடைபிடித்து செய்துக்கொள்ளலாம்.

ஒரு முஸ்லீம் இதனை படித்துவிட்டு பாக்கியஸ்தானத்தை பலப்படுத்த வேண்டும் என்று அவர் நினைக்கிறார் என்றால் அவரின் மார்க்கத்தில் ஆன்மீக வழியில் என்ன சொல்லியுள்ளார்களோ அதனை செய்துக்கொள்ளலாம். 

ஆன்மீகவழியில் செய்யமுடியாது எனக்கு ஆன்மீகம் பிடிக்காது என்று நினைப்பவர்கள் தாராளமாக மக்களுக்கு சேவை செய்யலாம். மக்களுக்கு சேவை செய்து அவர் நல்லதை பெறலாம். சும்மா இருப்பதை விட ஏதோ நல்லதை செய்யலாம்.

ஒரு சிலருக்கு இது எதுவும் செய்யாமல் கூட நல்லது நடக்கும். அது அவர் பெற்ற பாக்கியம் என்று இருக்கவேண்டியது தான். எதுவும் நடக்கவில்லை என்று இருப்பவர்கள் செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: