Followers

Monday, October 19, 2015

சோதிட அனுபவம்


வணக்கம்!
          நேற்று ஒரு நண்பர் சாேதிடம் பார்க்க வந்திருந்தார். பொதுவாக பிளாக் வழியாக வரும் நண்பர்களுக்கு சோதிட அறிவு இருக்கும். சோதிட அறிவு கண்டிப்பாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் அதில் புரிதலும் இருக்கவேண்டும்.

திருமணம் சம்பந்தமாக சோதிடம் பார்க்க வந்திருந்தார். அவரின் பயம் ஏழாவது வீட்டு அதிபரி எட்டாவது வீட்டு அதிபதியோடு சம்பந்தம்பட்டு இருக்கிறது அதனால் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படுமோ என்று பயப்படுகிறார். 

சோதிடத்தில் ஏழாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டு அதிபதியோடு சேர்ந்து இருப்பதால் பிரச்சினை வரும் என்று எழுதியிருப்பார்கள். இது அனைவருக்கும் நடக்குமா என்றால் அது கிடையாது. ஏழாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டு சம்பந்தப்பட்டோ அல்லது எட்டாவது வீட்டில் இருந்து நன்றாக வாழும் தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள்.

ஒரு சிலருக்கு பிரச்சினை ஏற்படலாம் அது அந்த கிரகத்தின் தசாவில் அப்படி ஏற்படலாம் அதற்கும் பரிகாரம் நிறைய சொல்லி வைத்துள்ளார்கள். அதனை செய்து பிரச்சினை வராமல் காத்துக்கொள்ளலாம். சோதிடத்தை நன்றாக படியுங்கள். அனைத்து விதியும் வேலை செய்வதில்லை என்பதையும் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். அப்படியே வேலை செய்தாலும் பரிகாரமும் இருக்கின்றது என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள். இறைநம்பிக்கை கிரகங்களை மீறி வேலை செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: