Followers

Sunday, October 11, 2015

அனுபவம்


ணக்கம்!
          சனிப்பிரதோஷம் என்பதால் இரண்டு சிவன் கோவிலுக்கு அபிஷேக ஆராதனை பொருட்களை வாங்கிக்கொடுத்துவிட்டு ஒரு கோவிலில் பிரதோஷ வழிபாட்டை பார்த்தேன்.

பிரதோஷ வழிபாடு மிக சிறப்பாக அமைந்தது அதே நேரத்தில் இந்த பகுதியில் ஒரு சில இடத்தில் பிரதோஷ வழிபாடு நடைபெறும்பொழுது கருடன் வந்து வட்டமிடும் அவ்வப்பொழுது இதனை தரிசனம் மற்றும் பிரதோஷ தரிசனம் நன்றாக இருக்கும்.

கருட தரிசனம் வானத்தில் வட்டமிட்டு காட்டும் இதனை யாரும் கவனிப்பதில்லை அதற்கு காரணம் ஒவ்வொருவரும் ஒரு ஆன்மீக சொற்பொழிவை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். 

ஒரு கோவிலுக்கு சென்றால் நமது குறிக்கோள் வழிபாட்டில் தான் இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் தமது ஆன்மீக சொற்பொழிவை நடத்தினால் நாம் எதற்காக கோவிலுக்கு சென்றோம் என்பது திசை மாறி போய்விடும்.

நிறைய தெரிந்து வைத்திருந்தால் கூட கோவிலை விட்டு வெளியே வந்து தெரிந்த விசயத்தை பிறர்களுக்கு சொல்லுங்கள். கோவிலுக்குள் நாம் பேசாமல் இருந்தால் தான் நமக்கும் பிறர்க்கும் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

spalaniappan said...

அய்யா உங்கள் புகைப்படத்தை பிரசுரம் செய்தால் என் போன்ற வாசகர்கள் பார்க்க ஆவலாக இருக்கிறோம்.

muscat palaniappan